திமுக விஷச் செடியைத் தான் விதைத்தது! ஜெயக்குமார்!

Published:

jeyakumar - 2026

டி.என்.பி.எஸ்.சி.யில் திமுக விதைத்த விஷச் செடிகளை தற்போது களை எடுத்து வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து தில்லி செல்லும் முன் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் பேசினார்.

அப்போது, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார்.
விவசாயிகள் மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவரும் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

Stalin uday daya - 2026

டி.என்.எஸ்.பி. தேர்வு முறைகேடு வழக்கில் ஐயப்பன் என்பவரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறை கைது செய்துள்ளனர். காங்கிரசில் இருந்து திமுக சென்றுள்ள அப்பாவுவின் கூட்டாளி தான் இந்த ஐயப்பன். இதற்கு அப்பாவு என்ன சொல்லப் போகிறார் என்றார்.

மேலும், இவை எல்லாம் திமுக ஆட்சி காலத்தில் விதைக்கப்பட்ட பார்தினி செடிகள். அன்றைக்கு நடப்பட்டதை இன்றைக்கு சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டு வருகிறோம்.

எல் போர்டு உதயநிதி, அவரது தந்தை முந்திரிக்கொட்டை ஸ்டாலின் மற்றம் அப்பாவி போன்று எப்போதும் நடித்து வரும் தயாநிதி என்ன சொல்ல போகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Related articles

Recent articles

spot_img