December 6, 2025, 3:04 AM
24.9 C
Chennai

மொழிப்போர் தியாகியருடன் முதன்மையான ஒரு சந்திப்பு! : கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

ksr lradhakrishnan - 2025

தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கு மத்தியில் திமுகவை சேர்ந்த கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் பகுதிகளைச் சேர்ந்த மூத்த முன்னோடிகளை அவர்களது கிராமத்திலேயே சந்திக்கக் கூடிய வாய்ப்பும் கிடைத்தது.

குறிப்பாக மொழிப்போர்த் தியாகி பா.முத்து, ராஜாபட்டி ரகுபதி, குமரெட்டியாபுரம் பரமசிவம், 1960, 70களில் மூன்று முறை கோவில்பட்டி ஒன்றியச் செயலாளராக இருந்த அ.கோ.சி. தங்கப்பாண்டியன் போன்றோரை அவர்களது இல்லங்களிலேயே சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

இவர்களில் மொழிப்போர்த் தியாகி பா.முத்து, அ.பொ.சி. தங்கப்பாண்டியன் ஆகிய இருவர் ஒருகாலத்தில் கழகத்தின் முக்கிய முன்னோடிகளாக இருந்தனர். முதன் முதலாக திமுக துவங்கப்பட்ட காலத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக கொடியை அறிமுகப்படுத்தி தெற்கு பஜார் ஜில்விலாஸ் சோடா கம்பெனி கட்டிடத்தின் முனையில் ஏற்றிவைத்தார்.

அதேபோல, திருநெல்வேலி மாவட்ட முதல் மாநாடும் அதே காலக்கட்டத்தில் பழைய நாராயணசாமி தியேட்டர் அருகே சிறப்பாக நடைபெற்றது. தலைவர் கலைஞர் அந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்.

அண்ணா, ஈ.வி.கி.சம்பத், நாவலர், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராஜன், எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், கே.ஆர்.இராமசாமி போன்ற முக்கியத் தலைவர்களெல்லாம் அன்று பங்கேற்றனர். ஏறத்தாழ 60 ஆண்டுகள் கடந்துவிட்டன.

அதை கண்ணால் பார்த்து அதற்கு பணிகள் ஆற்றிய மொழிப்போர்த் தியாகி பா.முத்து, அ.கோ.சி. தங்கப்பாண்டியன் போன்றோர் சாட்சிகளாக இந்த வட்டாரத்தில் இன்று இருக்கிறார்கள். அ.கோ.சி.தங்கப்பாண்டியன் கால் நரம்பு பழுதுப்பட்டு சிகிச்சை எடுத்தும் பயனின்றி ஓய்வில் இருக்கிறார்கள். அவரை அவருடைய சொந்த ஊரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.

கடந்த 1977 காலக்கட்டத்தில் அவசரநிலை காலத்திற்கு பின் கோவில்பட்டி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். 1989 காலக்கட்டத்தில் எனக்காக கீழஇறால் வட்டாரத்தில் தேர்தல் பணிகளையும் ஆற்றினார். இயக்கத்தின் பல வரலாற்று நிகழ்வுகளையும், செய்திகளையும் நினைவுபடுத்தி நேற்று என்னிடம் பேசியது பயனுள்ள சந்திப்பாக அமைந்தது. அவர் நலம்பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

உடன் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எல். இராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ப.மு.பாண்டியன், க. அண்ணாதுரை, டி.ஆர்.குமார், அழகிரிசாமி, பரமசிவம்,தங்கராஜ், கிருஷ்ண வேலு மற்றும் கழகத் தோழர்கள் உடன் வந்தனர்.

– கே.எஸ்.இராதாகிருஷ்ணன் (செய்தித் தொடர்பாளர், திமுக.)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories