February 22, 2026, 12:40 AM
26.7 C
Chennai

மொழிப்போர் தியாகியருடன் முதன்மையான ஒரு சந்திப்பு! : கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

ksr lradhakrishnan - 2026

தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கு மத்தியில் திமுகவை சேர்ந்த கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் பகுதிகளைச் சேர்ந்த மூத்த முன்னோடிகளை அவர்களது கிராமத்திலேயே சந்திக்கக் கூடிய வாய்ப்பும் கிடைத்தது.

குறிப்பாக மொழிப்போர்த் தியாகி பா.முத்து, ராஜாபட்டி ரகுபதி, குமரெட்டியாபுரம் பரமசிவம், 1960, 70களில் மூன்று முறை கோவில்பட்டி ஒன்றியச் செயலாளராக இருந்த அ.கோ.சி. தங்கப்பாண்டியன் போன்றோரை அவர்களது இல்லங்களிலேயே சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

இவர்களில் மொழிப்போர்த் தியாகி பா.முத்து, அ.பொ.சி. தங்கப்பாண்டியன் ஆகிய இருவர் ஒருகாலத்தில் கழகத்தின் முக்கிய முன்னோடிகளாக இருந்தனர். முதன் முதலாக திமுக துவங்கப்பட்ட காலத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக கொடியை அறிமுகப்படுத்தி தெற்கு பஜார் ஜில்விலாஸ் சோடா கம்பெனி கட்டிடத்தின் முனையில் ஏற்றிவைத்தார்.

அதேபோல, திருநெல்வேலி மாவட்ட முதல் மாநாடும் அதே காலக்கட்டத்தில் பழைய நாராயணசாமி தியேட்டர் அருகே சிறப்பாக நடைபெற்றது. தலைவர் கலைஞர் அந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்.

அண்ணா, ஈ.வி.கி.சம்பத், நாவலர், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராஜன், எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், கே.ஆர்.இராமசாமி போன்ற முக்கியத் தலைவர்களெல்லாம் அன்று பங்கேற்றனர். ஏறத்தாழ 60 ஆண்டுகள் கடந்துவிட்டன.

அதை கண்ணால் பார்த்து அதற்கு பணிகள் ஆற்றிய மொழிப்போர்த் தியாகி பா.முத்து, அ.கோ.சி. தங்கப்பாண்டியன் போன்றோர் சாட்சிகளாக இந்த வட்டாரத்தில் இன்று இருக்கிறார்கள். அ.கோ.சி.தங்கப்பாண்டியன் கால் நரம்பு பழுதுப்பட்டு சிகிச்சை எடுத்தும் பயனின்றி ஓய்வில் இருக்கிறார்கள். அவரை அவருடைய சொந்த ஊரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.

கடந்த 1977 காலக்கட்டத்தில் அவசரநிலை காலத்திற்கு பின் கோவில்பட்டி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். 1989 காலக்கட்டத்தில் எனக்காக கீழஇறால் வட்டாரத்தில் தேர்தல் பணிகளையும் ஆற்றினார். இயக்கத்தின் பல வரலாற்று நிகழ்வுகளையும், செய்திகளையும் நினைவுபடுத்தி நேற்று என்னிடம் பேசியது பயனுள்ள சந்திப்பாக அமைந்தது. அவர் நலம்பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

உடன் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எல். இராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ப.மு.பாண்டியன், க. அண்ணாதுரை, டி.ஆர்.குமார், அழகிரிசாமி, பரமசிவம்,தங்கராஜ், கிருஷ்ண வேலு மற்றும் கழகத் தோழர்கள் உடன் வந்தனர்.

– கே.எஸ்.இராதாகிருஷ்ணன் (செய்தித் தொடர்பாளர், திமுக.)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories