கக்குவான் இருமலுக்கு…
மிளகு சாம்பல் ஒரு ரூபாய் எடை, மயிலிறகு சாம்பல் ஒரு ரூபாய் எடை இவற்றை ஒன்றாகக் கலந்து எட்டு பாகமாக்கி ஒவ்வொரு பாகத்தையும் பசு வெண்ணெயில் குழைத்துக் கொடுத்து வர சீக்கிரத்தில் இருமல் படிமானமாகி விடும்.
மரிக்கொழுந்தை கசக்கிப் பிழிந்து சாறெடுத்து நாலைந்து சொட்டுச்
சாற்றில் சிறிது தேன் விட்டுக் குழைத்து குழந்தையின் நாக்கில் தொடர்ந்து மூன்று நாள்கள் கொடுத்து வர குணம் தெரியும். மிளகு. மயில் இறகு.
ஆமையின் ஓடு (மருந்து கடைகளில் கிடைக்கும்) சம எடை எடுத்து நெருப்பிலிட்டுக் கருக்கி நன்றாக இடித்து பட்டுப்போல் தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு சிட்டிகை
தூளை தேன் விட்டுக் குழைத்து குழந்தையின் நாக்கில் காலை, மாலை.
தடவி வர நான்கைந்து நாள்களில் குணம் தெரியும். அலுமினியப் பாத்திரத்தில் படிகாரத்தை பொரித்து வைத்துக் கொண்டு இரண்டு குன்றிமணி அளவு வெந்நீரில் கலக்கி தினமும் மூன்று வேளை ஐந்து நாள்கள் கொடுக்க குணம் தெரியும்.
கக்குவான் இருமலுக்கு எலுமிச்சை ரசமும் தேனும் விளக்கெண் ணெயும் சேர்த்துக் கொடுக்கலாம். அல்லது அன்னாசி சாறும் தேங்காய் எண்ணெயும் சம அளவு கலந்து நெருப்பில் காய வைத்து ஆறிய பிறகு தலைக்குத் தேய்த்துக் குளிக்க சீக்கிரம் குணமாகும்.
கபம் நீங்க…
தூது வளைத் துவையல் கபத்துக்கு மிகவும் நல்லது. தூது வளைக் கீரையுடன் இஞ்சி, மிளகு, கொத்துமல்லி, மிளகாய் வைத்து அரைத்து தாளித்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட நுரையீரல் நோய்கள், மூளை நரம்புகள், உடலின் தாதுக்கள் அத்தனையும் உரம் பெறும்.
குழந்தைகளுக்கு கபக்கட்டு ஏற்பட்டால் தும்பைப் பூச்சாறு கொஞ்சம் எடுத்து தேன் கலந்து கோரோசனை மாத்திரை அல்லது கஸ்தூரி மாத்திரையை இழைத்து உள்ளுக்குக் கொடுக்க கபக்கட்டு நீங்கும்.
அதிமதுரம் 15 கிராம். சுக்கு 10 கிராம். சீனா கற்கண்டு 15 கிராம் எடுத்துக் கொள்ளவும். அதிமதுரத்தையும், கக்கையும் தட்டிப்போட்டு கற்கண்டையும் சேர்த்து தண்ணீர் விட்டுக் காய்ச்சி பாதியளவு சுண்டியதும் வடிகட்டி இரவு படுக்கப் போகுமுன் உள்ளுக்கு சாப்பிட நல்ல குணம் தெரியும்.
தூதுவளை இலைச்சாறு, இஞ்சி சாறு. துளசி சாறு சேர்த்து தேன் கலந்து குழந்தைகளுக்கு மூன்று நாள்கள் கொடுக்க தெக்கத்திக்கணை எனும் இழுப்பு உடனே நிற்கும். கபம் கரைந்து ஆரோக்கியம் பெருகும்.
விளாம்பழம் சாப்பிட நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் கபம் உடைந்து வெளியேறும்.
கண் இரைப்பைகளில் கட்டியா?
வெண் சங்கை முலைப்பாலில் உரைத்து கட்டியின் மேல் பற்றுப்பு சீக்கிரத்தில் குணமாகும்.