வயிற்று வலியா?
பதினாறு அவுன்ஸ் கொதி நீரில் 10 கிராம் கிராம்பை நசுக்கிப் போட்டு வேளைக்கு ஒரு அவுன்ஸ் குடிக்க வயிற்று வலி குணமாகும்.
உளுந்து மாவினால் கூழோ கஞ்சியோ செய்து சாப்பிட வயிற்று வலி நின்று விடும்.
அகத்திக்கீரையை நன்றாக உலர்த்தி இடித்து தூள் செய்து சலித்து வைத்துக் கொண்டு காலை, மாலை இருவேளை அரை தோலா எடை வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்தாலும் வயிற்று வலி குணமாகும்.
வெட்டை நோய் (கொனோரியா)சரியாக…
முள்ளங்கி விதையில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தூள் செய்து நீரில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர கடுமையான வெட்டை நோயும் குணமாகும்.
ரஸ்தானி வாழைப் பூவை மட்டையை நீக்கி நரம்போடு போட்டு கால் விட்டர் பசும்பால் விட்டு இடித்து சாற்றை வடிகட்டி பளங்கற்கண்டு சேர்த்து காலையில் மட்டும் மூன்று நாள்கள் சாப்பிடவும். உணவில் காரம், புளி தள்ளுபடி செய்யவும்.
முகப்பருவுக்கு…
சிறிது புனுகை முகப்பரு மேல் பூசி வர சில சமயம் அமுங்கி விடும். அல்லது பழுத்து உடையும்.
*கஸ்தூரி மஞ்சளை நன்றாக அரைத்து கொஞ்சம் வெண்ணெய் சேர்த்துக் குழப்பி முகத்தில் பருவுள்ள இடத்தில் தேய்த்து சீயக்காய் பொடி போட்டு நன்றாக தேய்த்துக் குளிக்கவும்.
வாயுத் தொல்லைக்கு…
இஞ்சியை இடித்து சாறு பிழிந்து சிறிது நீர் விட்டு, பனை வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சி, ஏலம், கிராம்பு, ஜாதிக்காய் இவற்றை சிறிதளவு தூள் செய்து போட்டுக் கிளறி பாகு பதமான வுடன் இறக்கி வைத்து ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வாயுத் தொல்லைகள் நீங்கும்.
காலரா வாந்தி நிற்க…
ஒரு பிடி வேப்பிலையை துவையல் போல் அரைத்து தண்ணீரில் கலந்து குடித்து விட்டால் காலராவினால் ஏற்படும் வாந்தி நிற்கும்.