அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: நீர்க்கடுப்பு, கூகை வீக்கம், காய்ச்சல், கிராந்தி..!

Published:

health tips 1
health tips 1

கிரந்தி – சிஃபிலிஸ் குணமாக…

  • எட்டு கிராம் மிளகு. 15 கிராம் எருக்கஞ்செடியின் வேர்ப்பட்டை சம அளவு பனைவெல்லம் சேர்த்து நன்றாக இடித்து மிளகளவு மாத்திரைகளாக செய்து நிழலில் உலர்த்தி எடுத்து காலை, மாலை ஒரு மாத்திரை தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும்.

நீர்க்கடுப்பு சரியாக…

மாதுளம் பழத்தை கொட்டையுடன் மென்று தின்ன நீர்க்கடுப்பு குணமாகும்.

புளியங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து சாப்பிட நீர்ச்சுருக்கு குணமாகும்.

முருங்கை ஈர்க்குகளை ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து குடிக்க நீர் இறங்கும்.

காய்ச்சலில் மலம் கழிக்க….

காய்ச்சலாக இருக்கும்போது பொதுவாக மலம் கழியாது. அப்போது பேதி மருந்தும் கொடுக்கக் கூடாது. சர்க்கரையை வறுத்தால் அது சிவந்து தீய்ந்து வரும். அப்போது அதில் ஆழாக்கு நீர் விட்டு பாதியாக காய்ச்சி இளஞ்சூட்டுடன் குடிக்க நாலைந்து முறை வெளிக்குப் போகும். காய்ச்சலும் சில சமயம் குணமாகும்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

கூகை வீக்கத்திற்கு (புட்டாலம்மை)

வேப்பிலையும் நாலில் ஒரு பங்கு மஞ்சளும் சேர்த்து மை போல் அரைத்து வீக்கத்தின் மேல் பற்று போட கூகை வீக்கம் குணமாகும்.

காய்ச்சல் சரியாக…

சீந்தில் கொடி, பற்பாடகம், நீல வேம்பு, ஏலக்காய், சுக்கு வகைக்கு ஒரு ரூபாயெடை எடுத்து ஒரு சட்டியில் தட்டிப் போட்டு இரண்டாழாக்கு தண்ணீர் விட்டு பொதியாக சுண்டக் காய்ச்சி காலை, மாலை இரண்டு அவுன்ஸ் கொடுக்க காய்ச்சல் குணமாகும்.

Related articles

Recent articles

spot_img