அண்ணன் மகள் இறப்புச் செய்தி கேட்டு கண் கலங்கிய மோடி

Published:

2014 ல் பெற்ற இமாலய வெற்றி பெற்று தனது தாயிடம் ஆசி வாங்கிய போது எடுத்த படம். இந்த படத்தை அதன் பின்னர் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இதில் நமது பிரதமர் மற்றும் அவரது தாயாரை தவிர யாரையும் தெரியாது. இதில் வட்டம் இடப்பட்டவர் பெயர் நிகுன்ஞ்பென், இவர் பிரதமிரின் அண்ணன் பிரகலாத் மோடியின் பெண்.

துரதிஷ்டவசமாக, கடந்த வாரம், மாரடைப்பினால் உயிரிழந்தார். அவர் உடல்நலன் சரியில்லை என்ற செய்தி பிரதமர் ஜி-20 கூட்டமப்பு மாநாட்டில் இருக்கும் போது தெரிவிக்கப்பட்டது. ஆதாலால் நாடி திரும்பியதுடன் தனது அண்ணனுக்கு அழைத்து மகளின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அப்போது தான் அவருடைய மகள் இறந்து ஈம சடங்கு நடைப்பெற்று கொண்டிருந்தது. தனது அடுத்த அடுத்த வேலைகளினால் நேரம் ஒதுக்கி சடங்குக்கு சென்று தனது குடும்பத்திற்கு ஆறுதல் கூற செல்லமுடியவில்லை. இந்த நிகழ்வு அரசில் உள்ள யாருக்கும் தெரியவும் இல்லை.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

காஷ்மீர் சம்மந்தமாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்ற போது பிரதமர் கண்கலங்கிய நிலையில் இருக்கிறாரே என்று விசாரித்த போது, தனது அண்ணன் மகள் இறந்தது அனைவருக்கும் தெரியவந்துள்ளது.

நிகுன்ஞ்பென் தனது கணவருடன் ஒரு சிறிய வாடகை வீட்டில் வசித்து வந்தார், குடும சூழல் காரணமாக தையல் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு பாடம் எடுத்து குடும்ப பாரத்தை குறைத்தார். தற்போது இருக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தனது சித்தப்பா பிரதமர் என்ற அதிகார தோரனையில்லாமல், சாதாரன குடிமகனை போல வாழ்ந்து வந்திருக்கின்றனர் பிரதமரின் குடும்பம். இத்தகை எளிமை தற்காலத்தில் கான்பது அரிது.

இந்த துயர் செய்தி கேட்டும், ஒருநாள் விடுப்பு எடுத்து குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லாமல், அடுத்த அடுத்த மாநாடுகளுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டு செயலில் ஈடுபடும் பிரதமருக்கு பாராட்டுக்கள்.

இந்த செயலின் மூலம் நமது பிரதமரின் கடின உழைப்பும் அவரிடம் இருக்கும் உத்வேகமும் நாட்டின் நலனிலேயே இருப்பதை நாம் கான முடிகிறது. இத்தகைய மாமநிதரை நமக்கு வழங்கிய பாரத தாய்க்கு நன்றி கூறி, அவர்க்கு அந்த ஈசன் சர்வ சக்தியையும் வழங்கி அவரின் முயற்ச்சியால் நாடு வளம் பெற ஆசிகள் வழங்க வேண்டும் என பிராத்திப்போம்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

செய்தி: ஜா. ஆனந்த் பரத்வாஜ்

source: https://postcard.news/this-story-of-narendra-modi-will-wet-your-eyes/

Related articles

Recent articles

spot_img