ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ஜாகிர் நாயக் ரூ.50 லட்சம் நன்கொடை

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சர்ச்சைக்குரிய முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக்கின் தன்னார்வ அமைப்பு கடந்த 2011-ஆம் ஆண்டு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவாக அமைக்கப்பட்ட ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் சார்பில், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் (எஃப்சிஆர்ஏ) பதிவு செய்யப்பட்ட அமைப்பு ராஜீவ் காந்தி நிதி அறக்கட்டளை. அந்த அமைப்புக்கு, மற்றொரு தன்னார்வ அமைப்பான இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை (ஐஆர்எஃப்) கடந்த 2011-ஆம் ஆண்டு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கியதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
உள்துறை அமைச்சகத்தின் பயங்கரவாதக் கண்காணிப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஐஆர்எஃப் அமைப்பு, சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்குக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஐஆர்எஃப் செய்தித் தொடர்பாளர் ஆரிஃப் மாலிக் கூறியதாவது: நாங்கள் எத்தனையோ தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கியுள்ள நிலையில், ராஜீவ் காந்தி அறக்கட்டளையை மட்டும் குறிப்பிட்டு சிலர் சர்ச்சையை எழுப்புவது ஏன்? என்றார் மாலிக்.
காங்கிரஸ் விளக்கம்: இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியதாவது: ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ஐஆர்எஃப் அமைப்பு தாமாக முன்வந்து நன்கொடை வழங்கியது. தற்போது பயங்கரவாதத்தைப் பரப்பி வருவதாகவும், கட்டாய மதமாற்றங்களில் ஈடுபடுவதாகவும் ஜாகிர் நாயக் மீது குற்றம் சாட்டப்படுவதையடுத்து, அந்தத் தொகை திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. நன்கொடை வழங்கப்பட்டபோது மத்திய அரசின் பயங்கரவாதக் கண்காணிப்பு வளையத்துக்குள் ஜாகிர் நாயக்கும், அவரது அமைப்புகளும் கொண்டு வரப்படவில்லை என்றார் அவர்.
முன்னதாக, வங்கதேசத் தலைநகர் டாக்காவில், கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் இந்திய மாணவி உள்பட 24 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு பயங்கரவாதி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஜாகிர் நாயக்கின் உரைகளை மேற்கோள் காட்டியிருந்தார்.
அதையடுத்து, “அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாதிகளாக மாற வேண்டும்’ என்று பிரசாரம் மேற்கொண்டதாகவும், இளைஞர்களை பயங்கரவாதத்தின் பக்கம் இழுப்பதாகவும் ஜாகிர் நாயக் மீது வங்கதேச அரசு குற்றம் சாட்டியது.
வங்கதேசத்தில் பிரபலமான அவரது தொலைக்காட்சிக்கும் தடை விதித்தது. மும்பையைச் சேர்ந்த ஜாகிர் நாயக்குக்கு வங்கதேசம் மட்டுமின்றி பிரிட்டன், கனடா, மலேசியா ஆகிய நாடுகளும் தடை விதித்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories