29-03-2023 9:15 AM
More
    Homeஇந்தியாமகன் கண் முன்னே பெற்றோருக்கு நடந்த கொடூரம்!

    To Read in other Indian Languages…

    மகன் கண் முன்னே பெற்றோருக்கு நடந்த கொடூரம்!

    vikaram sing - Dhinasari Tamil

    7 வயது குழந்தையின் முன் பெற்றோர் கொல்லப்பட்ட சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உத்திரப்பிரதேச மாநிலத்தில் எடாவா என்னுமிடல். விக்ரம் சிங் என்ற 35 வயது இளைஞர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் ஜோதி. இவருடைய வயது 32 .இவர்களுக்கு 7 வயது மகன் உள்ளார். தம்பி ஒருவரும் இருக்கிறார். இவருடைய தம்பி ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.

    வேலை நிமித்தமாக ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராமுக்கு குடும்பத்தினருடன் இடம்பெயர்ந்தார். விக்ரம் சிங் அங்குள்ள பிபிஓ-வில் பணியாற்றி வருகிறார். 4 வருடங்களுக்கு முன்னர் விக்ரம் சிங் வேலைப்பார்த்த நிறுவனத்தில் அபினவ் அகர்வால் என்பவர் பணியாற்றினார்.

    அவர் விக்ரமுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 1.5 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். பணத்தகராரை தீர்த்து கொள்வதற்காக அபினவை விக்ரம் சிங் வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்தவுடன் இருவரும் உணவு சாப்பிட்ட பிறகு மது அருந்தினர். விக்ரம் சிங்கின் தம்பி தன்னுடைய பக்கத்து வீட்டிலுள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இன்று அதிகாலை விக்ரமின் வீட்டிலிருந்து பயங்கரமான அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த விக்ரமின் சகோதரர் அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்திருக்கிறார் அப்போது விக்ரம் சிங்கும், அவருடைய மனைவியும் குத்தி கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தனர்.

    அருகிலேயே அபினவ் இருந்தார். அவரிடம் கேட்டதற்கு, பணத்தகராறு காரணமாக விக்ரம் சிங்கை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். அப்போது கூச்சலிட முயன்ற மனைவியையும் அபினவ் குத்தி கொலை செய்துள்ளார்.

    மெயின் கேட் மூடி இருந்ததால் அபினவால் தப்பிக்க இயலவில்லை. 7 வயது குழந்தைக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. உடனடியாக காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து அபினவை கைது செய்தனர். இந்த சம்பவமானது வட இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    five × four =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...