December 5, 2025, 9:23 PM
26.6 C
Chennai

ஜெயலலிதா மறைவு:  தலைவர்கள் அஞ்சலி!

புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடி: முதல்வர் ஜெயலலிதா மறைவு ,இந்திய அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடி தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஜெயலலிதாவுடன் பழகிய சந்தர்ப்பங்களை நான் என்றும் சந்தோஷமாக நினைவு கூறுவேன். மக்களுடன் நெருக்கமாக தொடர்பு வைத்திருந்த ஜெயலலிதா ஏழைகளின் நலனுக்காவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி: தமிழக வளர்ச்சிக்காக ஜெயலலிதா ஆற்றிய பங்கு நீண்டகாலம் அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கும்.
சோனியா: முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்ட போது எந்த அளவிற்கு நோயை எதிர்த்து போராடினாரோ அதே அளவு போராட்ட குணத்துடன் தனது வாழ்நாள் முழுவதும் செயல்பட்டார்.
ராகுல் : சிறந்த தலைவரை இழந்துவிட்டோம் ஜெயலலிதாவின் பெண்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிய இழப்பாக அமைந்துள்ளது. ஜெ., மறைவு என்னை மிகவும் பாதித்து விட்டது
ம.பி., முதல்வர் சவுகான்: முதல்வர் ஜெயலலிதா மறைவு அறிந்து மிகுந்த துயரடைந்தேன் தமிழக மக்களுக்கு எங்களுடைய இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.
பொன்.ராதாகிருஷ்ணன்: தான் கொண்ட கொள்கையில் உறுதியாகவும் தனக்கு சரி என்று பட்டதை தீர்க்கமாவும் நின்று சாதித்தவர், துணிச்சலான அரசியல் தலைவர் என அறியப்பட்டவர்
ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு: மக்களுக்காக உண்மையாக உழைத்த தலைவர் என்ற முறையில் ஜெயலலிதா எப்பொழுதும் நம்நினைவில் இருப்பார்.
தில்லி முதல்வர் கெஜ்ரிவால்: ஜெயலலிதா ஒரு செல்வாக்குள்ள தலைவர் சாதாரண மக்களின் தலைவர்
ராஜ்நாத்சிங்: இந்திய அரசியலில் மிகவும் முக்கிய இடத்தை வகித்தவர் ஜெயலலிதா அவருடைய மறைவு சமுதாய மக்களிடையே பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தும்
மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு: ஜெயலலிதா மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன், அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மம்தா: வலுவான, திறமையான மக்களின் நண்பனாக கவர்ந்திருக்கும் தலைவர் அவரது இழப்பு எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
ஹமீத் அன்சாரி: ஜெயலலிதா மறைவு இந்திய நாட்டு மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு
தமிழக (பொ) கவர்னர் வித்யாசாகர் ராவ்: தமிழக மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
கருணாநிதி: அ.தி.மு.க.,வினர் மனதில் ஜெ., நீடித்து வாழ்வார்
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்: ஜெயலலிதாவின் மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
மத்திய அமைச்ச நிர்மலா சீத்தாராமன்: விடாமுயற்சியும் திடமான மனமும் கொண்ட பயணமாக ஜெயலலிதாவின் வாழ்க்கை இருந்தது.
சசிதரூர்: ஜெயலலிதா அசாதாரண பெண். வெற்றிகரமான மக்கள் தலைவராக விளங்கினார். மத்திய அமைச்சர் நிதின் கட்காரி: ஒரு சிறந்த நிர்வாகியை, பிரபலமான அரசியல்வாதியை தமிழ்நாடு இழந்து விட்டது.
விஜயகாந்த்: ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.
கனிமொழி: திறமை மற்றும் தனித்துவம் மிக்க தலைவரை இழந்து விட்டோம்.
அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி: நம் இதயங்களில் என்றும் வாழ்வார் ஜெயலலிதா.
லாலு பிரசாத் யாதவ்: நாடு உறுதியான தைரியமான தலைவரை இழந்து விட்டது.
வெங்கைய நாயுடு: டாக்டர்கள் தீவிரமாக போராடியும் ஜெயலலிதாவை காப்பாற்ற முடியவில்லை இது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது.
அமிதாப் பச்சன்: வலிமையான பெண் தலைவர் ஜெயலலிதா, அவரது மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்திய சினிமாவில் நூற்றாண்டு விழாவை சிறப்பித்த ஒரே முதல்வர். மிகுந்த புகழுக்கு உரியவர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories