ஜெயலலிதா மறைவு:  தலைவர்கள் அஞ்சலி!

புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடி: முதல்வர் ஜெயலலிதா மறைவு ,இந்திய அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடி தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஜெயலலிதாவுடன் பழகிய சந்தர்ப்பங்களை நான் என்றும் சந்தோஷமாக நினைவு கூறுவேன். மக்களுடன் நெருக்கமாக தொடர்பு வைத்திருந்த ஜெயலலிதா ஏழைகளின் நலனுக்காவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி: தமிழக வளர்ச்சிக்காக ஜெயலலிதா ஆற்றிய பங்கு நீண்டகாலம் அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கும்.
சோனியா: முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்ட போது எந்த அளவிற்கு நோயை எதிர்த்து போராடினாரோ அதே அளவு போராட்ட குணத்துடன் தனது வாழ்நாள் முழுவதும் செயல்பட்டார்.
ராகுல் : சிறந்த தலைவரை இழந்துவிட்டோம் ஜெயலலிதாவின் பெண்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிய இழப்பாக அமைந்துள்ளது. ஜெ., மறைவு என்னை மிகவும் பாதித்து விட்டது
ம.பி., முதல்வர் சவுகான்: முதல்வர் ஜெயலலிதா மறைவு அறிந்து மிகுந்த துயரடைந்தேன் தமிழக மக்களுக்கு எங்களுடைய இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.
பொன்.ராதாகிருஷ்ணன்: தான் கொண்ட கொள்கையில் உறுதியாகவும் தனக்கு சரி என்று பட்டதை தீர்க்கமாவும் நின்று சாதித்தவர், துணிச்சலான அரசியல் தலைவர் என அறியப்பட்டவர்
ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு: மக்களுக்காக உண்மையாக உழைத்த தலைவர் என்ற முறையில் ஜெயலலிதா எப்பொழுதும் நம்நினைவில் இருப்பார்.
தில்லி முதல்வர் கெஜ்ரிவால்: ஜெயலலிதா ஒரு செல்வாக்குள்ள தலைவர் சாதாரண மக்களின் தலைவர்
ராஜ்நாத்சிங்: இந்திய அரசியலில் மிகவும் முக்கிய இடத்தை வகித்தவர் ஜெயலலிதா அவருடைய மறைவு சமுதாய மக்களிடையே பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தும்
மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு: ஜெயலலிதா மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன், அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மம்தா: வலுவான, திறமையான மக்களின் நண்பனாக கவர்ந்திருக்கும் தலைவர் அவரது இழப்பு எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
ஹமீத் அன்சாரி: ஜெயலலிதா மறைவு இந்திய நாட்டு மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு
தமிழக (பொ) கவர்னர் வித்யாசாகர் ராவ்: தமிழக மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
கருணாநிதி: அ.தி.மு.க.,வினர் மனதில் ஜெ., நீடித்து வாழ்வார்
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்: ஜெயலலிதாவின் மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
மத்திய அமைச்ச நிர்மலா சீத்தாராமன்: விடாமுயற்சியும் திடமான மனமும் கொண்ட பயணமாக ஜெயலலிதாவின் வாழ்க்கை இருந்தது.
சசிதரூர்: ஜெயலலிதா அசாதாரண பெண். வெற்றிகரமான மக்கள் தலைவராக விளங்கினார். மத்திய அமைச்சர் நிதின் கட்காரி: ஒரு சிறந்த நிர்வாகியை, பிரபலமான அரசியல்வாதியை தமிழ்நாடு இழந்து விட்டது.
விஜயகாந்த்: ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.
கனிமொழி: திறமை மற்றும் தனித்துவம் மிக்க தலைவரை இழந்து விட்டோம்.
அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி: நம் இதயங்களில் என்றும் வாழ்வார் ஜெயலலிதா.
லாலு பிரசாத் யாதவ்: நாடு உறுதியான தைரியமான தலைவரை இழந்து விட்டது.
வெங்கைய நாயுடு: டாக்டர்கள் தீவிரமாக போராடியும் ஜெயலலிதாவை காப்பாற்ற முடியவில்லை இது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது.
அமிதாப் பச்சன்: வலிமையான பெண் தலைவர் ஜெயலலிதா, அவரது மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்திய சினிமாவில் நூற்றாண்டு விழாவை சிறப்பித்த ஒரே முதல்வர். மிகுந்த புகழுக்கு உரியவர்
ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories