இஸ்ரோ விஞ்ஞானி மர்மமான முறையில் இறப்பு! கொலை?

s suresh isro - 2026

தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தின் அமீர்பேட்டை பகுதியில் மூத்த இஸ்ரோ (ISRO) விஞ்ஞானியை கொலை செய்யப்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

56 வயதான எஸ். சுரேஷ் இஸ்ரோவின் தேசிய ரிமோட் சென்சிங் சென்டருடன் தொடர்புடையவர். இஸ்ரோ மையத்தின் புகைப்பட பிரிவில் இவர் பணிபுரிந்தார். நேற்று (செவ்வாய்க்கிழமை) அமீர்பேட்டை அன்னபூர்ணா குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் சுரேஷின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கூர்மையான ஆயுதத்தால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகப்பட படுகிறது..

விஞ்ஞானி சுரேஷ் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தனது பிளாட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று அவர் அலுவலகத்திற்கு வராத நிலையில், அவருடன் பணிபுரிபவர்கள் அவரை மொபைலில் அழைத்துள்ளனர். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதுக்குறித்து சென்னையில் இருக்கும் ஒரு வங்கியில் பணிபுரியும் எஸ்.சுரேஷின் மனைவிக்கு தெரியப்படுத்தினர். இந்த செய்தியைக் கேட்ட அவரின் மனைவி ஹைதராபாத் புறப்பட்டு வந்தார்.

எஸ்.சுரேஷின் சில உறவினர்களும் அதே குடியிருப்பில் வசிக்கின்றனர். எஸ்.சுரேஷை தொடர்புக்கொள்ள முடியவில்லை என காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் வீட்டின் கதவு திறந்து உள்ளே சென்றபோது, அங்கு எஸ்.சுரேஷ் இறந்த நிலையில் தரையில் கிடந்துள்ளார். அவரின் தலையில் அதிக அளவில் காயங்கள் உள்ளன. அவரின் தலையில் ஏதோ கனமான பொருள் கொண்டு தாக்கப்பட்டு அவர் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறை சம்பவ இடத்திலிருந்து தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்களிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories