December 5, 2025, 8:42 PM
26.7 C
Chennai

மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் சிறைதான்: பிரதமர்!

modi 2 - 2025

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறை உறுதி என அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் வரும் அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓயப்போகிறது என்பதால் பிரச்சாரம் இரு மாநிலங்களிலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இரு மாநிலங்களிலும் மாறி மாறி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த பொதுக்கூட்டத்தல் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் செய்யப்பட்டுள்ள முதலீடு 5 மடங்கு அதிகரித்துள்ளது.

உலக அளவில் நான் சந்திக்கும் ஒவ்வொரு தொழிலதிபர்களுமே, இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகின்றார்கள். தற்போது வலிமையான மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைந்த பிறகு இந்தியாவின் செல்வாக்கு உலகம் முழுவதும் பரவி இருக்கிறது.

நாட்டை கொள்ளையடித்தவர்களை சிறைக்கு அனுப்புவேன் என தேர்தலுக்கு முன்பே நான் கூறியிருந்தேன். அதன்படி இப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது அல்லவா? ஆனால் இதற்கு முன்பு இப்படி நடவடிக்கை எடுக்க துணிச்சல் யாருக்கும் இருந்தது இல்லை. நாட்டில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அதற்கான பணிகள் தொடங்கிவிட்டது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் கொள்ளையடித்த ஒவ்வாரு காசையும் அவர்களிடம் சேர்க்காமல் நான் ஓயமாட்டேன்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories