பிரதமருக்கு மோடிக்கு முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் கடிதம்

Published:

இலங்கைச் சிறைகளில் உள்ள 51 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில், இலங்கைச் சிறைகளில் தமிழக மீனவர்கள் 51 பேர் அடைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, அவர்கள் அனைவரும் விரைவாக விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்குமாறு பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும் என இலங்கை அமைச்சர் அறிவித்திருப்பதையும், இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருப்பதையும் ஓ.பன்னீர் செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீனவர்கள் பிரச்னை தொடர்பாக இரு நாட்டு அமைச்சர்கள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், வெளியாகியுள்ள இத்தகவல் ஏமாற்றத்தை அளிப்பதாக ஓ. பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்களின் படகுகளை புதுப்பித்து, அவற்றை இலங்கை அரசு வழங்க வேண்டும் என்றும், இதன் மூலம், படகுகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க முடியும் என்றும் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img