சிலிண்டருக்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தினால் ரூ.5 தள்ளுபடி

சமையல் எரிவாயு சிலிண்டரை ஆன்லைனில் முன்பதிவு செய்து, கட்டணமும் செலுத்தினால் ரூ. 5 தள்ளுபடி செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் இந்த சலுகையை அறிவித்துள்ளன.

மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக, டெபிட், கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல், ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கிரெடிட், டெபிட் கார்டுகள் மற்றும் இ-வாலட் முறையைப் பயன்படுத்தி பெட்ரோல், டீசல் வாங்குவோருக்கு 0.75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது சமையல் எரிவாயுவுக்கும் மின்னணு பணப் பரிவர்த்தனையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சமையல் எரிவாயு சிலிண்டரை ஆன்லைனில் முன்பதிவு செய்து, கட்டணமும் செலுத்தினால் ரூ. 5 தள்ளுபடி செய்யப்படும்.

வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஆன்லைனில் பணத்தைச் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இதன்மூலம் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை திரையில் தெரியும். அந்த 5 ரூபாயைக் கழித்த பின்னர் மீதத்தொகையைச் செலுத்த வேண்டும்.

தள்ளுபடி செய்யப்பட்ட தொகை வீட்டில் சிலிண்டர் விநியோகிக்கப்படும்போது அளிக்கப்படும் ரசீதிலும் இருக்கும்”. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் ரொக்க பணப் பரிமாற்றத்தைக் குறைத்துக் கொண்டு மின்னணு முறைக்கு மாற வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய சலுகைகள் அறிவிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories