பையோடு போனா 2 கிலோ … கல்யாண பத்திரிக்கை காட்டினா 35 கிலோ… வெங்காயம்!

Published:

onion - 2026

பையோடு போனால் ரெண்டு கிலோ வெங்காயம். கல்யாண பத்திரிக்கை காண்பித்தால் 35 கிலோ வெங்காயம்!

கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை விண்ணளவு உயர்ந்துள்ளது. இது சாமானிய மக்களுக்கு பெரும் துயரத்தைத் தந்துள்ளது.

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் வெங்காய விலை ஒரு கிலோ ரூ.80ஐத் தொட்டு விட்டது . ஆனால் பிஸ்கமான், நெபெட் மூலம் மக்களுக்கு நியாய விலையில் வெங்காயம் கிடைக்க வழி செய்து உள்ளார்கள்.

மார்க்கெட் விலையை விட குறைவாக 35 ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயம் தருகிறார்கள். அதனால் சாமானிய மக்களுக்கு சிறிது உதவிகரமாக உள்ளது.

பை எடுத்துச் செல்வதற்கு 2 கிலோ வெங்காயமும் கல்யாண பத்திரிக்கை காட்டுபவர்களுக்கு 35 கிலோ வெங்காயமும் தருகிறார்கள்.

ஆனால் அவ்வாறு வெங்காயம் வாங்குபவர்கள் முன்கூட்டியே தம் பெயர், போன் நம்பர்களை பதிவு செய்து கொண்டு செல்ல வேண்டியிருக்கும்!

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img