டிச.25,26 தேதிகளில் திருமலை ஆலயம் மூடல்!

Published:

tirupathi therottam - 2026

சூரிய கிரகணத்தை முன்னிட்டு டிசம்பர் 25, 26 தேதிகளில் திருமலை ஆலயம் மூடப்படும்.

சூரிய கிரகணத்திற்காக டிசம்பர் 25, 26 இரண்டு நாட்களும் சேர்ந்து 13 மணிநேரம் திருமலை ஸ்ரீவாரி ஆலயக் கதவுகள் மூடப்பட உள்ளன.

டிசம்பர் 26 வியாழன் காலை 8.08 மணி முதல் பகல் 11.16 மணி வரை சூரிய கிரகணம் உள்ளது.

ஆலய சம்பிரதாயத்தின்படி 6 மணி நேரம் முன்பாக டிசம்பர் 25 புதன் இரவு 11 மணிக்கு ஸ்ரீவாரி ஆலயம் கதவுகளை மூட உள்ளார்கள்.

டிசம்பர் 26 வியாழன் மதியம் 12 மணிக்கு ஆலயக் கதவுகள் திறக்கப்பட்டு ஆலயத்தை சுத்தம் செய்த பின் மதியம் 2 மணிக்கு பக்தர்களின் தரிசனம் தொடங்கும்.

பக்தர்கள் கவனத்தில் கொள்ளும்படி திருமலா திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img