தெலங்கானா ஏற்படும் முன் கிறிஸ்துவர்கள் பாதுகாப்பின்மையுடன் வாழ்ந்தார்கள்!

telanganaminister - 2026

தனி தெலங்காணா மாநிலம் ஏற்படுவதற்கு முன் கிறிஸ்தவர்கள் பாதுகாப்பின்மை யோடு வாழ்ந்தார்கள்… என்று கூறியுள்ளார் மைனாரிட்டி நலத்துறை அமைச்சர் ‘கொப்புல’ ஈஸ்வர்.

“தெலங்காணா முதல்வர் கேசிஆர் ஆதரவால் கிறிஸ்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளார்கள். அதற்கு முன்பு பாதுகாப்பின்மையை உணர்ந்தார்கள். கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு பலப் பல நல்ல திட்டங்களை மேற்கொண்ட பெருமை கேசிஆரையே சாரும்.

மாநிலத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். வெள்ளிக்கிழமை எல்பி ஸ்டேடியத்தில் மாபெரும் கிறிஸ்மஸ் விருந்து ஏற்பாடு செய்துள்ளோம். இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் கேசிஆர் வருகை தருகிறார்” என்று அமைச்சர் கொப்புல ஈஸ்வர் தெரிவித்தார்.

வியாழனன்று ரங்காரெட்டி மாவட்டம் கோகாபேட்டையில் அரசாங்கம் ப்ரஸ்டீஜியசாக அமைக்க முன்வந்துள்ள கிறிஸ்டியன் பவனுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

” இந்த மாநகரத்தில் கிறிஸ்தவர்களுக்கு மகாபவனம் இருக்க வேண்டும் என்ற மகா சங்கல்பத்தோடு இத்தனை செலவில் நிலம் ஒதுக்கி 10 கோடி ரூபாய் நிதி கூட அளித்துள்ள முதல்வர் கேசிஆர் தன் நல்ல மனதை வெளிப்படுத்தியுள்ளார் “என்றார் அமைச்சர்.

” நாட்டில் வேறு எந்த மாநிலமும் கிறிஸ்தவர்களை இத்தனை தூரம் அணைத்துக் கொண்டது இல்லை” என்றார்.

இந்த சந்தர்ப்பத்தில் கிறிஸ்தவர்களுக்கு இருந்த பெரிய பிரச்சனை கூட தீர்ந்துவிட்டது என்று அமைச்சர் குறிப்பிட்டார். கிறிஸ்தவர்களின் மயானத்திற்காக 40.21 ஏக்கர் நிலம் ஒதுக்கிய பத்திரங்களை சிஎஃப்சி கார்ப்பரேஷன் எம்டி காந்தி வெஸ்லீக்கு அமைச்சர் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட கல்வித் துறை அமைச்சர் சபீதா ரெட்டி பேசுகையில் முதல்வர் ‘நல்ல மனசு உள்ள மகாராஜா’ என்றார். அனைத்து வர்க்க மக்களின் கண்களிலும் ஒளியை பார்க்க விரும்புபவர் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ பிரகாஷ் கௌட், எம்எல்சி ராஜேஷ்வர், மைனாரிட்டி நலத் துறை ஆலோசகர் ஏகே கான் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories