யசோதைக்கும் கண்ணனுக்கும் உள்ள உறவு போல்… பத்திரிகையாளர் உறவு!

Published:

telangana writers - 2026

யசோதா – கிருஷ்ணன் போல தெலங்காணா – பத்திரிகையாளர் உறவு. மாநிலத்தின் மீது அன்பினால் கட்டப்பட்டுள்ளனர்… என்றார் கல்வகுண்ட்ல கவிதா!

தாமோதரனாக யசோதையின் வாத்சல்யத்திற்கு ஸ்ரீகிருஷ்ணன் கட்டுப்பட்டது போலவே தெலங்காணாவில் ஜெர்னலிஸ்டுகள் ஏதோ ஒருவிதத்தில் தெலங்காணா மீது உள்ள பிரேமைக்கு கட்டுப்பட்டு உள்ளார்கள் என்று முன்னாள் எம்பி கல்வகுண்ட்ல கவிதா கூறினார் .

‘கம்பாலபல்லி’ கிருஷ்ணா எழுதிய தி ஜெர்னி ஆஃப் எ ஜர்னலிஸ்ட் என்ற நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று தெலுங்கு விஸ்வ வித்யாலயாவில் நடந்தது.

முக்கிய விருந்தினராக முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா, சிறப்பு விருந்தினராக ஆந்திர ஜோதி எடிட்டர் கே. ஸ்ரீநிவாஸ், டி சாட் எடிட்டர் ஆர் சைலேஷ் ரெட்டி, என்டிவி எடிட்டர் சிவப்ரசாத், ஹெச்எம்டிவி ஈவோ என் ஶ்ரீனிவாஸ் ரெட்டி, tv5 மார்க்கெட்டிங் வைஸ் ப்ரசிடென்ட் ஸ்ரீநிவாச மூர்த்தி, டிஎன்என் சேனல் சேர்மன் டாக்டர் சங்கம் ரெட்டி பிரித்திவிராஜ் ஆகியோர் பங்கேற்று நூலை வெளியிட்டனர்.

அப்போது பேசுகையில் கவிதா “ஸ்ரீ கிருஷ்ணருக்கு தாமோதரன் என்று இன்னொரு பெயர் உள்ளது. யாராலும் கட்டப்பட இயலாதவன் யசோதம்மாவின் அன்புக்கு எவ்வாறு கட்டுப்பட்டானோ அதேபோல் தெலங்காணாவில் பத்திரிக்கையாளர்கள் கூட ஏதோ ஒரு விதத்தில் தெலங்காணா மீது உள்ள அன்புக்கு கட்டிப்போட பட்டுள்ளார்கள்” என்றார்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img