கேரளத்தின் மதுவிலக்குக் கொள்கை சரியானதே: உயர் நீதிமன்றம்

kerala-high-court திருவனந்தபுரம்: கேரள அரசு கொண்டு வந்துள்ள மதுவிலக்குக் கொள்கை சரியானதுதான் என்று அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. கேரளாவில் உள்ள 780 மதுபானக் கூடங்களில் 418 பார்கள் கடந்த ஆண்டு மூடப்பட்டன. மீதமுள்ளவற்றில் பெரும்பாலானவையும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே மது பான பார்கள் செயல்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மதுபான பார்களும் மூடப்பட வேண்டும் என்றும் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி அளித்த வாக்குறுதியில், அடுத்த 10 ஆண்டுகளில் கேரளாவில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றார். அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மதுபான பார் உரிமையாளர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் கே.டி. சங்கரன், பாபு மேத்யூ பி. தாமஸ் ஆகியோர் விசாரித்து தீர்ப்ப்பளித்தனர். அதில்… அரசின் நிதிநிலை மோசமாகி வருவதாக மதுபான பார் உரிமையாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். உண்மையில் அவர்களுக்கு அரசின் நிதிநிலையில் அக்கறையில்லை. மக்களின் நலன் கருதியே அரசு மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை. அரசின் முடிவில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. நான்கு நட்சத்திர ஓட்டல்களில் மதுபான பார்களை நடத்த தனி நீதிபதி அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்கிறோம். என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த மதுபான பார் உரிமையாளர்கள் இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர். கேரள உயர் நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பின் படி, இனி ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே மதுபான பார்கள் செயல்படும். அவ்வகையில் 24 பார்கள் மட்டுமே செயல்படும். இருப்பினும், பீர், ஒயின் வகை பார்களுக்கு தடையில்லை என்பதால் அவை செயல்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories