நரசிம்ம ராவுக்கு நினைவகம்: கட்டுவது மோடி அரசு !

narasimha-rao புது தில்லி: காங்கிரஸ் கட்சியால் கைவிடப்பட்ட முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் நினைவகத்தைக் கட்ட இப்போது மோடி அரசு முயற்சி செய்து வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர்களில் முக்கியமானவர் பி.வி.நரசிம்ம ராவ். 1991 முதல் 1996 வரை காங்கிரஸ் அரசை தலைமையேற்று வழிநடத்தியவர். சாதனைகள் பல செய்த அவர், இந்திய பொருளாதார சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கியவர். தொழில்துறை, பொருளாதாரம் மற்றும் அரசியல் சட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தவர். நரசிம்ம ராவ் கடந்த 2004-ஆம் ஆண்டு மறைந்தார். அவர் மறைந்து 10 ஆண்டுகளாகியும் முந்தைய காங்கிரஸ் அரசு அவருக்கு நினைவகம் அமைக்க மறுத்துவிட்டது. 2013-ம் ஆண்டு முதல் எந்த ஒரு தலைவருக்கும் தனியாக நினைவகங்களை அமைப்பதில்லை என்றும் முடிவு செய்தது. இந்நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு யமுனை நதிக்கரையில் சமாதி வடிவில் நினைவகம் அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது, அங்கே விஜயா காட் மற்றும் சாந்திவானுக்கு நடுவில் 22.56 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக நிறுவப்படுகிறது. இந்த இடத்திற்கு அருகில் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால், சந்திரசேகர், இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் ஜெயில் சிங், சங்கர்தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன், ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட தலைவர்களின் நினைவகங்கள் அமைந்துள்ளன. 9 நினைவகங்களை அமைப்பதற்காகக் கட்டப்பட்ட இந்த சமாதி காம்ப்ளக்ஸில் 6 சமாதிகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டன. இன்னும் 3 மீதமுள்ளன. அந்த இடத்தில் நரசிம்மராவுக்கு நினைவகம் எழுப்பப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories