நிலக்கரி, இரும்புத்தாது வழக்கு: சென்னை துறைமுக கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

புது தில்லி: நிலக்கரி, இரும்புத்தாது கையாள தடை விதித்தது பற்றிய வழக்கில் சென்னை துறைமுகத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தது. சென்னை துறைமுகத்தில் நிலக்கரி மற்றும் இரும்புத்தாது இறக்குமதி செய்யப்பட்டு வந்ததால் சேப்பாக்கம் தொடங்கி ராயபுரம் வரை உள்ள பகுதிகளில், பெருமளவில் தூசு மற்றும் கரித்துகள்கள் படிந்ததுடன் சுகாதார சீர்கேடு அதிகரித்ததாகவும் புகார்கள் எழுந்தன. பல கட்டிடங்களிலும் கரி தூசுபடிந்து, சுவாசம் மற்றும் நுரையீரல் கோளாறுகள் ஏற்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன், முத்தையா மேஸ்திரி குடியிருப்போர் நலச்சங்கம், ராயபுரம் குடியிருப்போர் நலச்சங்கம் ஆகியவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், சென்னை துறைமுகத்தில் நிலக்கரி மற்றும் இரும்புத்தாது கையாளுவதற்கு நீதிமன்றம் தடை விதித்ததுடன், அந்தப் பணியை எண்ணூர் துறைமுகத்துக்கு மாற்றவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை துறைமுக அதிகாரிகள், லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. அதன்படி அந்த கமிட்டியும் அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா மற்றும் சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஒரு நிலக்கரித்துகள் மாசு கூட சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் அமைவதற்கு எந்த வகையில் நடவடிக்கை எடுக்க முடியும், இதற்கு சென்னை துறைமுகம் என்ன செய்யப்போகிறது என்பதுதான் முக்கியம். இந்த நோக்கில் ஒரு விரிவான அறிக்கையை கோர்ட்டுக்கு தாக்கல் செய்யுங்கள். அதனை ஆராய்ந்து பிறகு முடிவெடுக்கப்படும் என நீதிபதிகள் கூறினர். 14 வாரங்களுக்கு பிறகு மீண்டும் இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெறும். அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு எதிர்த்தரப்பினரும் அந்த அறிக்கையின் மீது தங்கள் எதிர்வினையை பதிவு செய்யும் வகையில் இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர். இதன்படி வழக்கின் மீதான விசாரணை ஜூலை 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories