திருமலை கெஸ்ட் ஹவுஸில் மது, மாது, சல்லாபம், லஞ்சம்…: வெங்கடேஸ்வரா பக்தி சேனல் சேர்மன் ராஜினாமா!

svbc pritvi - 2026

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் சேர்மன்… திரைப்பட காமெடியன் பிரித்விராஜ் ராஜினாமா.

சற்றுமுன் ஹைதராபாத் சோமாஜிகுடா பிரஸ்மீட்டில் தன் ராஜினாமாவை வெளியிட்டார்.

எஸ்விபிசி சேர்மன் பிரித்திவிராஜ் உடனே பதவி விலக வேண்டும் என்று தீவிர விமர்சனம் எழுந்தது.

எஸ்விபிசி சேர்மன் பிரித்திவிராஜ் பெண் ஊழியரோடு செய்த சரச சல்லாபம் தொடர்பான ஆடியோ ஊடகங்களில் வைரல் ஆனதன் பலனாக பரபரப்பு.

எஸ்விபிசி ஊழியர் சங்க கவுரவத் தலைவர் ‘கந்தாரபு’ முரளி தீவிரமாக பிருத்வி பற்றி விமர்சித்தார்.

பிரத்விரஜ் என்ற காமுகனை எஸ்விபிசி சேர்மனாக ஜெகன்மோகன் ரெட்டி அரசு நியமித்தது. ஊழியர்களை ஆபாசமாக திட்டுவதும் பெண் ஊழியர்களை வேதனைக்கு உள்ளாக்குவதும் அவருக்கு வழக்கமாக உள்ளது. இனி ஒரு கணமும் அவர் எஸ்விபிசியில் பணிசெய்ய அருகதை அற்றவர் என்று விமர்சித்தார்.

எஸ்விபிசி சேர்மனாக விசிஆர் அறைக்குள் வந்து பெண்களை பின்புறமாக அணைப்பேன் என்று பிருத்வி கூறுவது கண்டிக்கத்தக்கது என்றார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!
svbc pritvi1 - 2026

வேலை வாங்கித் தருவதாக 36 பேரிடமிருந்து லட்சங்களை வசூலித்துள்ளார் என்றார் . பத்மாவதி கெஸ்ட் ஹவுஸில் அமர்ந்து மது அருந்தியதாக ப்ருத்வி மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

பவித்திரமான திருமலையில் பத்மாவதி கெஸ்ட் ஹவுசில் அமர்ந்து மது அருந்தியது, பெண் ஊழியரோடு சல்லாபத்தில் ஈடுபட்ட ஆடியோ வைரலானது, வேலை தருவதாக கூறி லஞ்சம் வாங்கியது என்று ப்ருத்வி பெயரில் பல குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ள நிலையில் பிரித்திவிராஜ் மேலிட உத்தரவுப்படி பதவி விலகியுள்ளார்.

டிடிடி சேர்மன் சுப்பாரெட்டி தலையிட்டு ப்ருத்விராஜ் நியமித்த முப்பத்தி ஆறு பேரில் 30 பேரை வேலையில் இருந்து நீக்கினார். பிரித்திவிராஜ் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து டிடிடி விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க சுப்பாராவ் உத்தரவிட்டார்.

‘ஜகன் உத்தரவுக்கு மதிப்பளித்து சேர்மன் பதவியில் இருந்து விலகுகிறேன். குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் என்னை செருப்பால் அடியுங்கள்’ என்று செருப்பைத் தூக்கிக் காட்டினார் ப்ருத்வி.

svbc pritviraj - 2026

சற்றுமுன் ஹைதராபாத் சோமாஜிகுடா பிரஸ் கிளப்பில் மீடியாவிடம் பேசிய பிரிதிவிராஜ் ஆவேசமாக காணப்பட்டார்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

” இப்போதே டாக்டரை வரவழைத்து வந்து ரத்தப் பரிசோதனை செய்யுங்கள். நான் குடிகாரன் என்பது நிரூபணமானால் செருப்பால் அடியுங்கள். ஜகன் முதலமைச்சராக வேண்டும் என்ற தீட்சை இருந்தேன். எல்லா பழக்கங்களையும் விட்டு விட்டேன். சனிக்கிழமையில் இருந்து நல்ல தண்ணீர் கூட குடிக்கவில்லை. நான் மிகுந்த மன வேதனையில் உள்ளேன்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories