செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்ட சல்மான்கான்! வைரலாகும் வீடியோ!

Published:

salman khan - 2026

செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்டார் சல்மான் கான்! வைரலாகிறது ஒரு வீடியோ.

தன் அனுமதியின்றி செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் கையிலிருந்த செல்போனை சல்மான் கான் பிடுங்கிச் சென்றார். சல்மான் கானின் இந்த செயலை சிலர் குற்றம் சாட்டினர். வேறு சிலர் ரசிகர் செய்ததுதான் தவறு என்று கானுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தன் அனுமதியின்றி செல்பி எடுக்க முயன்ற ரசிகருக்கு இவ்வாறு அதிர்ச்சி அளித்தார் இந்த பாலிவுட் ஹீரோ. கோவா விமான நிலையத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

கோவாவில் சல்மான் கான் ராதே திரைப்பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக சென்ற வாரம் மும்பையில் இருந்து கோவா சென்றார். விமான நிலையத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த போது ஒரு ரசிகர் ஹீரோவோடு சேர்ந்து செல்ஃபி எடுக்க முயன்றார். ஆனால் கான் மிகக் கோபம் கொண்டு கண நேரத்தில் ரசிகரின் கையில் இருந்த போனை பிடுங்கிக் கொண்டு தன் வழியே சென்று விட்டார்.

அந்த ரசிகர் ஒரு விமான நிர்வாகத்தின் கடை நிலை ஊழியர் என்று தெரிகிறது. யாரும் புகார் அளிக்கவில்லை என்றாலும் வைரல் வீடியோ ஆதாரமாக தாம் நடத்திய விசாரணையின் போது சம்பவம் நடந்தது உண்மை என்று அறிந்தோம் என்று விமான நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

செலிபிரிட்டிகளுக்கு தொல்லை கொடுப்பது சரியல்ல என்று சில நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். தனக்கு தொல்லை தந்த ரசிகருக்கு சல்மான் தகுந்த பாடம் கற்பித்தார் என்ற கருத்துகளும் கூடவே வருகின்றன.

https://twitter.com/itsFilmyKida/status/1222087800939433984
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img