முதல் பிரசவத்துக்கு ரூ.6 ஆயிரம்: மத்திய அரசின் பெண்கள் நலத்திட்ட உதவி

Published:

modi n - 2026

முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு, பெண்கள் நலத்திட்ட உதவித் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு நலத்திட்டங்களுக்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் வழங்கப்படும் இந்த தொகை நேரடியாக வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். மேலும், மகப்பேறு பதிவு செய்யப்பட்டவுடன் முதல் தவணையாக 1000 ரூபாயும், 6-வது மாதத்தில் அடுத்த தவணையாக 2000 ஆயிரம் ரூபாயும், குழந்தை பிறந்தவுடன் 3-வது தவணையாக 3000 ரூபாயும் வழங்கப்படும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், அசாமில் இந்திய வேளாண் கழகம் அமைப்பதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 587 ஏக்கர் நிலம் மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img