ரஜினி அரசியலுக்கு வருவதால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை: ஓ.பன்னீர்செல்வம்

Published:

pannerselvam - 2026

ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதால், அதிமுக.,வுக்கு ஒன்றும் பாதிப்பில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அளித்தார்.

தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாம், அவர் நல்ல மனிதர்; யார் தலைவராக வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்றார். மேலும்,

நடிகர் ரஜினிகாந்தின் வருகை, அதிமுகவை எந்த விதத்திலும் பாதிக்காது என்று குறிப்பிட்டார்.

மேலும்,
தினகரன் , சுகேஷ் சந்திரசேகர் மீதான விசாரணையை துரிதப்படுத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளோம்.
தேர்தல் ஆணையத்தில் உரிய ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம்.
ஆர்கே நகரில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தியுள்ளோம்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது.
கட்சி விதிப்படி பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம்.
தற்போது பொருளாளருக்கு தான் கட்சியை நடத்த அதிகாரம் உள்ளது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

– என்று குறிப்பிட்டார் பன்னீர் செல்வம்.

இதனிடையே இன்று மாலை 4 மணி அளவில் அவர் பிரதமரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்தும், தமிழக அரசியல் சூழல் குறித்தும் பேசுவார் என்று கூறப்படுகிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img