மகளிர் தினத்திற்கு வாழ்த்துக் கூறி, தான் முன்பே கூறியபடி தனது டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தை, பெண் சாதனையாளர்களிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைத் தளங்களை பெண்கள் நிர்வகிப்பர் என பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி, இன்று காலை முதல் தனது டிவிட்டர் கணக்கை சாதனைப் பெண்களிடம் ஒப்படைத்தார். அதில், பல்வேறு தகவல்கள், வீடியோக்கள், பெண்களின் கருத்துகள் என நொடிக்கு நொடி பதிவேற்றம் ஆகி வருகிறது.
மகளிர் திருநாளன்று பிரதமர் நரேந்திர மோதியின் டுவிட்டர் கணக்கை கையாளும் வாய்ப்பை தமிழகத்தை சேர்ந்த சினேகா மோகன்தாஸ் என்ற பெண் பெற்றுள்ளார்.