கர்நாடகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 143 நாடுகளைச் சோந்த 1,70,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். 6,600-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.
இந்தியாவில் நேற்று வரை 115-பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 32 பேரும், கேரளத்தில் 23 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கொரோனா தொற்றுக்கு இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துவிட்டனா். 13 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இந்நிலையில், கர்நாடகத்தில் இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம், கர்நாடகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இத்துடன் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.