spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஅத்தியாவசிய பொருட்கள் வாங்க நடந்து தான் வரவேண்டும்! உத்தரவிட்ட அரசு!

அத்தியாவசிய பொருட்கள் வாங்க நடந்து தான் வரவேண்டும்! உத்தரவிட்ட அரசு!

- Advertisement -
bike police

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் பலர் அதை பொருட்படுத்தாமல் சாலைகளில் சுற்றுவதால் கர்நாடக அரசு புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளதுடன் மக்கள் அவசியம் இன்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் மக்கள் தொடர்ந்து சாலைகளில் பயணித்தப்படியே உள்ளனர். பல இடங்களில் போக்குவரத்து காவலர்கள் மக்களிடம் மிகவும் மரியாதையாக வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.

சில இடங்களில் போலீஸார் அத்துமீறி வெளியே சுற்றுபவர்களை நூதனமான முறைகளில் தண்டனை அளித்து வருகின்றனர். சில இடங்களில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

கர்நாடகாவில் ஊரடங்கு அறிவித்துள்ள போதிலும் மக்கள் தொடர்ந்து வாகனங்களில் பயணித்துக் கொண்டே இருக்கின்றனர். இதை தடுக்கும் பொருட்டு கர்நாடக அரசு புதிய உத்தரவை அமல்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதன்படி, அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் மக்கள் வாகனங்களில் வர கூடாது, நடந்துதான் வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதை மீறி வாகனங்களில் வந்தால் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe