மருத்துவமனைக்கு பணிக்கு வரும் மருத்துவப் பணியாளர்கள் அனைவரும், வளாகத்துக்குள் நுழையும் முன்பே செல்போன்களைக் கொடுத்துவிட்டு பணிக்குச் செல்ல வேண்டும் என்று மேற்கு வங்க முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தொற்று செல்போன்கள் மூலமாகவும் பரவும் வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவுறுத்தல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், மருத்துவமனைக்குச் செல்லும் அனைத்து மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும், நோயாளிகளும் மருத்துவமனை வளாகத்துக்குள் செல்லும் போதே தங்களது செல்போன்களை கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும்.