December 6, 2025, 9:14 AM
26.8 C
Chennai

கொரோனா: மாநிலவாரியாக பாதிப்பு, உயிரிழப்பு..பட்டியல்!

corono 9 - 2025

கொரோனா இந்தியாவில் ஏற்படுத்தி வரும் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. இதுவரையில்லாத வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 213 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 97 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 152 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 206 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 20 ஆயிரத்து 917 பேர் குணமடைந்துள்ள நிலையில் 44 ஆயிரத்து 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

pattiyal 1 - 2025

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

”மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று 53 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழோந்தோர் எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் நேற்று 21 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு 493 ஆக அதிகரித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் நேற்று உயிரிழப்பு இல்லாததால் உயிரழந்தோர் 215 ஆக தொடர்கிறது. மேற்கு வங்கத்தில் 14 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது. தில்லியில் உயிரிழப்பு 73 ஆக தொடர்கிறது. ராஜஸ்தானில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆகத் தொடர்கிறது. உத்தரப் பிரதேசத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆகவும், ஆந்திராவில் 45 ஆகவும் இருக்கிறது. கர்நாடகா, பஞ்சாப்பில் தலா 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

pattiyal 1 1 - 2025

ஜம்மு காஷ்மீர், ஹரியாணாவில் தலா 9 பேரும், பிஹாரில் 6 பேரும், கேரளாவில் 4 பேரும், ஜார்க்கண்ட், ஒடிசாவில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் 2 பேரும், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,171 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4,199 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து தில்லியில் 6,923 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,029 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத்தில் 8,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 7,204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 1,954 பேர் குணமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் 3,814 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 3,614 பேரும், தெலங்கானாவில் 1,196 பேரும், கேரளாவில் 512 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் 3,467 பேர், ஆந்திராவில் 1,980 பேர், கர்நாடகாவில் 848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 861 பேர், மேற்கு வங்கத்தில் 1,939 பேர், பஞ்சாப்பில் 1,823 பேர், ஹரியாணாவில் 703 பேர், பிஹாரில் 591 பேர், அசாமில் 63 பேர், உத்தரகாண்டில் 67 பேர், ஒடிசாவில் 294 பேர், சண்டிகரில் 696 பேர், சத்தீஸ்கரில் 59 பேர், லடாக்கில் 42 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்டில் 157 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 55 பேர், திரிபுராவில் 150 பேர், புதுச்சேரியில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 6 பேர் குணமடைந்தனர். மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவு, கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை.

மேகாலயாவில் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மிசோரத்தில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்”. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories