வார இறுதி மக்கள் சபைகள் நடத்த கேஜ்ரிவால் திட்டம்

Published:

புது தில்லி: ஆம் ஆத்மிக்கு சரிந்து வரும் இமேஜை தூக்கி நிறுத்த, வார இறுதியில் ’ஜன் சபா’ என்ற மக்கள் சபைகளை நடத்த அரவிந்த் கேஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால், தற்போது ஊடகங்கள் மூலம், ஆம் ஆத்மி கட்சிக்குள் நடக்கும் சண்டைகள் வெளித்தெரிவதால் ஏற்பட்ட இமேஜை மக்களிடம் சரிசெய்ய, வார இறுதியில் மக்கள் சபைக் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த வார இறுதியில் முதல் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார் கேஜ்ரிவால். அதன்படி சனிக்கிழமை இந்தக் கூட்டம் நடைபெறும். புது தில்லி முந்த்கா பகுதியில், சனிக்கிழமை அன்று விவசாயிகள் குறித்த மாநில அரசின் கொள்கைகளை விளக்கியும், ஞாயிறு அன்று, பண்ட்லி பகுதியில் அங்கீகாரமற்ற காலனி குடியிருப்புகள் குறித்த விவாதத்தையும் நடத்த உள்ளார்.

Related articles

Recent articles

spot_img