
வாராணசி :
பிரதமர் நரேந்திர மோடி தனது வாரணாசி தொகுதியில் உள்ள காக்ராஹியா தொகுதியை இம்முறை தத்தெடுத்துள்ளார். இதன்மூலம் பிரதமர் மோடி தத்தெடுத்துள்ள கிராமங்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இதனை உபி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள காக்ராஹியா கிராமத்துக்கு வந்திருந்த யோகி ஆதித்யநாத், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பிரதமர் மோடி தனது பதவிக்காலத்தில் மூன்றாவது முறையாக காக்ராஹியா கிராமத்தை தத்தெடுத்துள்ளார். இதன்மூலம், இந்த கிராமம் அபரிமித வளர்ச்சி பெறும். இந்த கிராமத்தை தத்தெடுத்த பிரதமர் மோடிக்கு, கிராம மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
காக்ராஹியா கிராமம், மல்யுத்த வீரர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இந்த கிராமத்துக்கு மல்யுத்த வீரர்களின் கிராமம் என்ற பெயரும் உள்ளது.


