இஸ்ரேல் பாரதப் பிரதமர் வருகைக்கு 70 ஆண்டுகள் காத்திருந்தது: நெதன்யாஹு பெருமிதம்

modi nethanyahu - 2026
புது தில்லி:

இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப் பட்டது. இந்தியப் பிரதமர் ஒருவரை வரவேற்க தாங்கள் 70 ஆண்டுகள் காத்திருந்ததாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு நெகிழ்சியுடன் குறிப்பிட்டார்.

3 நாள் அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார் பிரதமர் மோடி. இஸ்ரேலில் பிரதமர் மோடிக்கு டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றார். தொடர்ந்து மோடி ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அமெரிக்க அதிபர், போப் ஆகியோருக்கு இணையாக பிரதமர் மோடிக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இஸ்ரேல்-இந்தியா இடையேயான தூதரக உறவின் 25 ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் பிரதமரின் பயணம் அமைந்துள்ளது.

பயங்கரவாதம் குறித்து இருவரும் பேசினர். பின் இரு பிரதமர்களும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மோடி, “பயங்ரவாதம், வன்முறைக்கு எதிராக போராட ஒவ்வொரு நாடும் முன்வர வேண்டும். அதற்கான சரியான நேரம் இது. உலத்தையே உலுக்கி வரும் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும். 6 லட்சம் யூதர்கள் பலியான யெட் வாஷம், பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதாரணம். இத்தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதத்துக்கு எதிராக போராட நாம் ஒன்றுபட வேண்டும்” என்றார்.

பின் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு விருந்தளித்தார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு பிரதமர் மோடி நினைவு பரிவு வழங்கினார். கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட, 9-10ஆம் நூற்றாண்டுகளை சேர்ந்த யூதர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் இரு காப்பர் தகடுகளையும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான தோரா சுருள் மற்றும் தங்கத்தால் பூசப்பட்ட உலோக கிரீடத்தையும் அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

மோடியின் பயணம் குறித்துப் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு, இந்தியப் பிரதமர் எங்கள் நாட்டுக்கு வருவதற்காக நாங்கள் 70 ஆண்டுகள் காத்திருந்தோம் என பெருமிதமாகப் பேசினார். மோடியை வரவேற்றுப் பேசிய நெதன்யாஹு, “இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம். இந்தியக் கலாச்சாரம், வரலாறு, ஜனநாயகம், எங்களுக்குப் பிடிக்கும். பிரதமர் மோடி எம் நண்பர், அவரை வரவேற்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். 70 ஆண்டு கனவு நிறைவேறியுள்ளது. மிகச்சிறந்த நல்ல தலைவர்களில் ஒருவர் மோடி. மேக் இன் இந்தியா என்பதுடன் நாங்கள் மேக் வித் இந்தியா என இருக்கிறோம். நமது உறவுக்கு வானமே எல்லை என்று மோடி கூறியிருந்தார். நமது உறவுக்கு வானமும் எல்லை இல்லை என்பதை நான் கூறுகிறேன். இன்னும் நமது உறவுகள் விரிவடையும் என்று பேசினார்.

வரவேற்பில் பேசிய மோடி, “எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது இஸ்ரேல் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இஸ்ரேல் பழைமையான கலாசார நாடாக இருந்த போதிலும் இளைஞர்களுக்கான முக்கியத்துவத்தைக் கொண்டது. இளம் நாடு இந்தியா. இஸ்ரேல் வந்தது குறித்து பெருமை அடைகிறேன். பயங்கரவாதம் உள்ளிட்ட சவால்களிலிருந்து நம் நாடுகளைப் பாதுகாக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியில் இஸ்ரேல் முக்கியப் பங்காற்றுகிறது. இஸ்ரேல் இந்தியாவின் மிக நெருங்கிய கூட்டாளி நாடு. நாம் இணைந்து செயல்படுவோம்” என்றார்.

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

பிரதமர் மோடியின் இந்த பயணத்தில், அவர் இஸ்ரேல் பிரதமர், அதிபர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார். இஸ்ரேல் பிரதமருடனான பேச்சுவார்த்தையின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவத்துறையில் ஒத்துழைப்பு, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

மோடி, டேன்சிகர் பூ பண்ணை, யெட் வாஷம் ஹோலோகாஸ்ட் நினைவிடம், தியோடர் ஹெர்சல் நினைவகம் இடங்களுக்குச் சென்றார். இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்ற உள்ள மோடி, ஹைபாவில் உள்ள இந்திய ராணுவ நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார்.

பிரதமர் மோடியின் டிவிட்டர் பதிவுகளில் இவற்றை அவ்வப்போது குறிப்பிட்டார். அவரது பதிவுகளில் இருந்து…

 

 

ALSO READ:  இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories