பெரு மழையால் உடைந்துபோன மேடாரம் ஜம்பன்ன வாகு பாலம்!

Published:

medaram-flood
medaram-flood
  • மேடாரம் கிராமத்தில் பெரு வெள்ளம் .
  • பெரு மழையால் உடைந்துபோன மேடாரம் ஜம்பன்ன வாகு பாலம்.

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் முலுகு மாவட்டத்தில் மிகப்பெரும் அளவில் மழை பெய்து வருகிறது. அதனால் ஏடூருநாகாரம் மண்டலத்திலுள்ள புகழ்பெற்ற ஜம்பன்னவாகு நதியில் வெள்ளநீர் மிகப்பெரும் அளவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர் பிரவாகம் அதிகமாக இருப்பதால் நதி மீதிருந்த பிரிட்ஜ் இடிந்து போனது.

medaram-bridge
medaram-bridge

தொட்ல கிராமம் அருகில் இன்று காலை பாலம் உடைந்து போனதாக செய்தி. இந்த பாலத்தை ஜம்பன்ன வாகு நதி மீது 2015ல் அமைத்தார்கள். பாலம் உடைந்து போனதால் மர்யால, கொண்டாயி, ஐலாபுரம் கிராமங்களுக்கு போக்குவரத்து நின்று போய்விட்டது.

அதுமட்டுமின்றி ஜம்பன்ன வாகுவின் நீர்ப் பெருக்கு காரணமாக மேடாரம் கிராமம் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. சம்மக்கா கோவில் எனப்படும் மேடையைச் சுற்றிலும் நீர் சூழ்ந்துள்ளது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img