சிறுவனை தொடர்ந்து கொண்டே இருக்கும் பாம்பு! ஒரே மாதத்தில் 8 முறை கடித்த சம்பவம்!

snake 1

மிக விநோத நிகழ்வாக, உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், ஒரு சிறுவனை, ஒரே பாம்பு ஒரு மாதத்தில் எட்டு முறை கடித்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக, சிறுவன் எட்டு முறை பாம்புக் கடியில் சிக்கியும் உயிர் பிழைத்துள்ளான்.

ராம்புர் கிராமத்தைச் சேர்ந்த யாஷ்ராஜ் மிஷ்ரா (17) பாம்பு கடித்து பல முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கடந்த வாரமும் பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளான்.

இது குறித்து சிறுவனின் தந்தை சந்திரமௌலி மிஷ்ரா கூறுகையில், மூன்றாவது முறை ஒரே பாம்பால் எனது மகன் கடிபட்டதை அடுத்து, அவனை பஹதுர்புர் கிராமத்தில் உள்ள எனது உறவினர் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டேன்.

ஆனால் அங்குச் சென்ற ஒரு சில நாள்களிலேயே அந்தப் பாம்பை பார்த்ததாக எனது மகன் கூறினான். அடுத்த நாளே அவனை அந்த பாம்பு கடித்துவிட்டது. உடனடியாக அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான்.

இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், சிறுவனை பாம்பு கடித்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்போம். அதோடு பாம்பு பிடிப்பவர்கள் கூறும் வைத்தியங்களையும் பார்ப்போம்.

ஆனால், ஒரு பாம்பு ஏன் எங்களது மகனை குறிவைத்துக் கடிக்கிறது என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்களது மகன் பாம்புக் கடியால் மன வேதனை அடைந்து, எப்போதும் பாம்பை நினைத்து அச்சத்திலேயே வாழ்ந்து வருகிறான்.

பல முறை பாம்புக் கடியில் இருந்து தப்பிக்க பூஜைகளும் செய்துவிட்டோம், பாம்பாட்டியை வரவழைத்து பாம்பை பிடித்துச் செல்லவும் முயற்சித்தோம். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை என்கிறார் சந்திரமௌலி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories