ஏமாற்றிய காதலன் மீது ஆசிட் ஊற்றிய காதலி!

ACID 3

ஆந்திராவின் கர்னூலில் காதலன் மீது ஒரு பெண் ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்னூல் மாவட்டம் நந்தியால் மண்டலத்தில் உள்ள பெட்டா கோட்டலா கிராமத்தில் வியாழக்கிழமை 20 வயது பெண் ஒருவர் தனது காதலன் மீது ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது.

இருவரும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர் என்றும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்திருந்தார் எனவும் குற்றம் சாட்டப்பட்ட பெண் கூறுகிறார்.

ஆனால் சில நாட்களுக்கு முன்பு, தனது பெற்றோர் அவருக்காக ஒரு பெண் பார்த்து வைத்திருப்பதாகவும், அவளை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறினார் எனவும் அந்த பெண் கூறுகிறார்.

வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்ட அந்த காதலன், அவளுடன் வாழ மாட்டேன் என்று கூறி தன்னிடன் வந்ததாகவும் அந்த பெண் கூறுகிறார்.

தனது குடும்பத்தினர் தனக்காக பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறிய போது, ஆத்திரமடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பெண் தனது காதலன் மீது ஆசிட் வீசினார். “நான் அவருக்காக மூன்று வருடங்கள் கல்லூரியைத் படிப்பை கூட விட்டு விட்டேன். அவர் என்னை ஏமாற்றினார். இதனால்தான் நான் அவர் மீது ஆசிட் ஊற்றினேன்” என்று குற்றம் சாட்டப்பட்டவர் கூறினார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

மாறாக, ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானவர் கூறுவது என்னவென்றால், பரஸ்பரம் ஒப்புக் கொண்டு தான் தங்கள் உறவை முறித்துக் கொண்டதாகக் கூறினார். அதைத் தொடர்ந்து தான் அவர் வேறொருவரை மணந்தார் எனவும் கூறப்படுகிறது.

பெந்தா கோட்டாலா கிராமத்தில் உள்ள தனது வீட்டின் அருகே வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் அந்தப் பெண் தனது முன்னாள் காதலர் மீது ஆசிட் வீசியதாக நந்தியல் தாலுகா காவல் நிலைய வட்ட ஆய்வாளர் திவாகர் ரெட்டி

குற்றம் சாட்டப்பட்டவர், ஒரு வாரத்திற்கு முன்பு அவள் கையில் ஆசிட் ஊற்றி தாக்கினார் என கூறப்படுகிறது. ஆனால் இந்த முறை அவள் அதை அவன் முகத்தில் வீசினாள்.

அவர் நந்தியால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று ரெட்டி கூறினார். இந்திய குற்றப்பிரிவில் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories