FCRA திருத்த மசோதா மூலம் மதமாற்று நிறுவனங்களுக்கு மோடி அரசு வைக்கும் ‘செக்’!

modi-speech-1
modi-speech-1

வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தில் (எஃப்.சி.ஆர்.ஏ) திருத்தம் செய்ய முற்படும் ஒரு மசோதா மத்திய பாஜக., அரசால் பட்டியலிடப் பட்டிருக்கிறது. இந்த மசோதாவின் படி, எந்தவொரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அலுவலர்களின் ஆதார் எண்களை வழங்குவது கட்டாயமாக இருக்கும், மேலும் அரசு ஊழியர்கள் வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கு தடை விதிக்கப்படும் வகையில் இது அறிமுகப்படுத்தப்பட்டது

மக்களவையில் ஞாயிற்றுக்கிழமை நேற்று, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை (திருத்த) மசோதா 2020ஐ, மக்களவையில் உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் அறிமுகப்படுத்தினார். ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அல்லது சங்கம் தனது எஃப்.சி.ஆர்.ஏ சான்றிதழைப் பெற மத்திய அரசிடம் அனுமதி பெற முன்மொழிகிறது.

இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய ராய், “எந்தவிதமான பாகுபாடும் இருக்காது. வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010 இன் கீழ் வெளிநாட்டு பங்களிப்புகளுக்காக மத நிறுவனங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதி தொடரும். ஆனால் இந்த நிறுவனங்கள் அவற்றின் நோக்கத்திலிருந்து விலகிச் செல்லக்கூடாது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடாது.

பெறப்பட்ட மொத்த வெளிநாட்டு நிதியில் 20 சதவீதத்திற்கு மேல் நிர்வாக செலவினங்களுக்காக செலவிட முடியாது என்று இந்த வரைவு மசோதா முன்மொழிகிறது. தற்போது இந்த வரம்பு 50 சதவீதமாக உள்ளது.

காங்கிரஸின் மனிஷ் திவாரி இந்த மசோதாவுக்கு ஆட்சேபனை தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸின் (டி.எம்.சி) சௌகடா ராயும் இந்த மசோதாவை எதிர்த்தார்! இது வெளிநாட்டு பங்களிப்புகளைத் தடுக்கும் முயற்சி என்று கூறினார். “வெளிநாட்டு பங்களிப்புகளை அதிக அளவில் கட்டுப்படுத்தாமல், ஒழுங்குபடுத்துவதே இதன் யோசனையாக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இந்த வகையில், FCRA சட்ட திருத்த மசோதா வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கிக்கொண்டு, தேச விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், மதமாற்றத்தில் ஈடுபடும் கூட்டத்திற்கு உள்துறை அமைச்சகம் போடும் பெரும் தடுப்பு என்று கருதலாம். இந்த மசோதாவை முன்வைத்து, இதன் மூலம் பலன்பெற்று வந்த கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள், மதமாற்று அமைப்புகள், என்.ஜி.ஓ.,க்கள் என்ற பெயரில் செயல்பட்டு வரும் அமைப்புகள் உள்ளிட்டவை எதிர்க்கட்சிகளுடன் இணைந்து, நாடு முழுவதும் மத்திய மோடி அரசுக்கு எதிராக பொதுமக்களைத் தூண்டி, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

இந்த சட்டத்தின் சில முக்கிய அம்சங்கள்

— வெளிநாடுகளிலிருந்து FCRA சட்டத்தின் மூலம் பணம் பெறும் NGO க்களின் இயக்குனர்கள் தங்களது ஆதார் எண்ணை கட்டாயமாக அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்

— FCRA மூலம் வரும் நன்கொடைகள் ஒரு குறிப்பிட்ட NGO வின் வங்கிக் கணக்கின் மூலம் மட்டுமே வரவேண்டும்

— வெளிநாடுகளிலிருந்து நன்கொடையாக வரும் பணத்தில் வெறும் 20 % மட்டுமே நிர்வாக செலவுக்காக செலவழிக்க வேண்டும்.. இப்போது அது 50 % ஆக உள்ளது. இவர்கள் வாங்கிய பணத்தை வாங்கிய காரணத்துக்காக பயன்படுத்தாமல், (மதமாற்றம் போன்ற) வேறு சில காரணங்களுக்காக பயன்படுத்திவிட்டு , அதை நிர்வாக செலவு என போலிக்கணக்கு காண்பிப்பது இதன் மூலம் மட்டுப் படுத்தப் படும்.

— ஒரு குறிப்பிட்ட NGO மீது புகார் வந்தால், அவர்கள் மீது முதற்கட்ட விசாரணை நடத்திய பிறகு, அந்த குற்றச்சாட்டில் அடிப்படை உண்மை இருக்கிறது என்று தோன்றினால், அந்த குறிப்பிட்ட NGO தாங்கள் தவறு செய்யவில்லை என்று நிரூபிக்கும் வரை, அவர்கள் அதுவரை வெளிநாட்டிலிருந்து நன்கொடையாக வாங்கிய பணத்தில் செலவழிக்காமல் உள்ள மிச்சப்பணத்தை செலவழிக்கவோ அல்லது புதிதாக நன்கொடையோ பெற முடியாது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories