December 6, 2025, 5:47 AM
24.9 C
Chennai

பழைய பள்ளி தோழிகள்.. கலகலப்பாக கிளம்பிய கோவா பயணம்! கண்ணீரில் முடிந்த சோகம்!

kova

கர்நாடக மாநிலம் தர்வாத் அருகே நேற்று காலை டிரக்கும் டெம்போவும்
நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 11 பேர் உயிரிழதனர்.

உயிரிழந்த பெண்கள் அனைவரும் பள்ளித் தோழிகள் என்றும், கோவாவுக்கு சுற்றுலா சென்ற போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. ஹுப்பள்ளி – தர்வாத் பைபாஸ் சாலையில் தர்வாத் நகருக்கு 8 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் டெம்போவில் வந்த 10 பெண்கள் மற்றும் அதன் ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்து கேஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழந்த 10 பெண்களில் 4 பேர் மருத்துவர்கள். மற்றவர்களும் மருத்துவத் துறையில் பணியாற்றி வந்தவர்கள். உயிரிழந்த பெண்கள் அனைவரும் பள்ளித் தோழிகள் என்பதும், அவர்கள் பொங்கல் விடுமுறையைக் கொண்டாட கோவா செல்ல வெள்ளிக்கிழமை காலை தேவநாகரியிலிருந்து புறப்பட்டு, காலை உணவு சாப்பிட தர்வாத் வந்திருந்ததும் தெரிய வந்துள்ளது.

kova-2

சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், மணல் ஏற்றிக் கொண்டு வந்த டிப்பர் லாரி, முன்னே சென்ற வாகனத்தை முந்த முற்பட்டபோது, எதிரே பள்ளித் தோழிகளுடன் வந்து கொண்டிருந்த டெம்போ வேனுடன் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் வேனில் இருந்த 8 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற மூன்று பேரும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

உயிரிழந்த பெண்களின் குடும்ப நண்பர் தர்வாத்தில் வசித்து வருகிறார். அவர் கூறுகையில், கோவாவுக்கு சுற்றுலாச் சென்றவர்களுக்காக தர்வாத்தில் காலை உணவு தயார் செய்து வைத்திருந்தோம். ஆனால், அவர்கள் வரும் வழியிலேயே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. நாங்கள் பள்ளிக் காலத்திலிருந்து தோழிகள். வெகு நாள்களுக்குப் பின் நாங்கள் அவர்களை சந்திக்க மிகுந்த ஆர்வத்தோடு இருந்தோம் என்கிறார்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

kova1-1

பள்ளித் தோழிகளான இவர்கள், தங்களது சுற்றுலாவை தொடங்கும் முன்பு, தேவநாகரியில் டெம்போவில் இருந்தபடி ஒரு செல்ஃபியை எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். பள்ளித் தோழிகளுடன் கோவா செல்கிறோம் என்று அதில் பதிவிட்டுள்ளனர். இந்த செல்ஃபி போட்டு சில மணி நேரத்தில் அவர்கள் விபத்தில் சிக்கியது குடும்ப உறுப்பினர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர்களது கடைசி செல்ஃபி, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories