கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ரானாகத் பகுதியில் 72 வயது கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளி ஒருவரை அம்மாநில சி.ஐ.டி. போலீஸார் மும்பையில் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார். முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட இந்த கும்பல் பின்னர் தப்பி ஓடிவிட்டது. இதனால் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்ய சி.ஐ.டி. விசாரணைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். இதை அடுத்து, சிஐடி போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி இந்தச் சம்பவம் தொடர்பாக 10 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இச்சம்பவத்தில் நேரடியாக தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யமுடியாமல் சி.ஐ.டி. போலீஸார் திணறினர். இந்நிலையில், சிக்கந்தர் ஷேக் என்ற முகமது சலீம் என்ற நபரை மும்பையில் மேற்கு வங்க சி.ஐ.டி. போலீஸார் இன்று கைது செய்தனர். அவரது செல்போன் எண்ணை வைத்து அவரைக் கைது செய்ததாக போலீஸ் உயரதிகாரிகள் கூறினர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளி கைது செய்யப் பட்டுள்ளார். சுமார் 12 நாட்களுக்குப் பிறகு கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது போலீசாரின் மத்தியில் சுறுசுறுப்பைக் கொடுத்துள்ளது. இன்னும் சில தினங்களில் மீதமுள்ள குற்றவாளிகளையும் பிடித்து விடுவோம் என மேற்கு வங்க போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Hot this week
உரத்த சிந்தனை
திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?
தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.
மதுரை
குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்
தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்
அரசியல்
திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics
உரத்த சிந்தனை
திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?
தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.
மதுரை
குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்
தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்
அரசியல்
திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
Entertainment News
Previous article

