காங்கிரஸ் உள்கட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு; செப்.30ல் ராகுல் தலைவராகத் தேர்வாக வாய்ப்பு

புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் உள்கட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி உள்கட்சித் தேர்தல்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதில், அகில இந்திய தலைவராக் ராகுல் காந்தி தேர்வாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி தெரிவித்த போது, ”அகில இந்திய அளவில் இரண்டு கட்டங்களாக காங்கிரஸின் உட்கட்சித் தேர்தல்கள் நடைபெறுகிறது. முதல் கட்டமாக, ஜூலை 16 முதல் ஜூலை 31 வரை கேரளா உள்ளிட்ட 18 மாநிலங்களிலும், 2வது கட்டமாக ஜூலை 28 முதல் செப்டம்பர் 30 வரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெறுகிறது.

  • ஜூலை 28 முதல் ஆகஸ்டு 14 வரை வட்டார உறுப்பினர்கள் தேர்தலும்,
  • ஆகஸ்டு 20 முதல் 31 வரை வட்டார காங்கிரஸ் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள், 6 மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒரு மாநிலக் குழு உறுப்பினர் தேர்தலும்,
  • செப்டம்பர் 1 முதல் 15 வரை மாவட்டத் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் தேர்தலும்,
  • செப்டம்பர் 21 முதல் 30 வரை மாநில தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், மாநில பிரதிநிதிகள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலும்,
  • அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முழுமையான கூட்டத்தில், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் தேர்வும் நடைபெறும். இந்தக் கூட்ட தேதி பின்னர் முடிவு செய்யப்படும்” என்று கூறியுள்ளர்..

செப்டம்பர் 30ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் என்பதால், அன்றைய தினம் ராகுல் காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories