கோலி – அனுஷ்காவை டுவிட்டரில் கலாய்த்த ரசிகர்கள்

Published:

virat kohli-anushka sarma உலகக் கோப்பை கிரிக்கெட் 2 ஆவது அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த பெரும் இலக்கை நோக்கி இந்தியா விளையாடிய போது 3 ஆவது வீரராக விராட் கோலி களம் இறங்கினார். அப்போது மைதானத்தில் இருந்த அவரது காதலியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா கைத்தட்டி உற்சாகப் படுத்தினார். கோலி அதிரடியாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் தேவையில்லாத ஷாட் ஆடி 13 பந்துகளில் ஒரு ரன்னில் அவுட் ஆனதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கோலி விளையாட வந்தபோது அனுஷ்கா உற்சாகமாக அவரது பேட்டிங்கைப் பார்க்கத் தயாரானார். மேலும் கேமரா அவர் பக்கம் திரும்பியபோது புன்னகையுடன் ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்தார். அனுஷ்காவுடன் ஒரு நண்பர் குழு வந்திருந்தது. அவர்களுடன் அனுஷ்கா உற்சாகமாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், கோலி அவுட்டானபோது அனுஷ்காவின் முகம் பெரும் சோகமாகி கோணிப் போனது. பெரும் ஷாக் அவருக்கு. கன்னத்தில் கை வைத்து உறைந்து போன அவரது முகத்தை டி.வி.யில் காட்டிக் கொண்டே இருந்தனர். ஏற்கெனவே கோலி மீது ஆத்திரத்தில் இருந்த ரசிகர்களின் வெறுப்பு அனுஷ்கா சர்மா மீதும் திரும்பியது. போட்டி முடிந்ததும் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ரசிகர்கள் இந்திய அணியின் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கோலி - அனுஷ்காவை காய்த்தனர். சில இடங்களில் விராட் கோலியின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாகக் கொண்டு சென்று தீ வைத்து எரித்தனர். அனுஷ்கா சர்மாவின் படங்களையும் எரித்தனர். காதலியுடன் ஊர் சுற்றுவதே கோலியின் மோசமான ஆட்டத்துக்கு காரணம் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டரில் கலாய்த்ததையும் காண முடிந்தது. இந்தியா அணியின் தோல்வியை விமர்சிப்பதை விட கோலி- அனுஷ்கா ஜோடியை தான் ரசிகர்கள் அதிகம் கலாய்த்தனர். #IndvsAus என்ற ஹாஷ் டாக்கில் அவர்களின் கலாய்த்தல் நேற்று டிவிட்டர் கணக்கில் பெரும் பரபரப்பாகியிருந்தது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img