கோலி – அனுஷ்காவை டுவிட்டரில் கலாய்த்த ரசிகர்கள்

virat kohli-anushka sarma உலகக் கோப்பை கிரிக்கெட் 2 ஆவது அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த பெரும் இலக்கை நோக்கி இந்தியா விளையாடிய போது 3 ஆவது வீரராக விராட் கோலி களம் இறங்கினார். அப்போது மைதானத்தில் இருந்த அவரது காதலியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா கைத்தட்டி உற்சாகப் படுத்தினார். கோலி அதிரடியாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் தேவையில்லாத ஷாட் ஆடி 13 பந்துகளில் ஒரு ரன்னில் அவுட் ஆனதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கோலி விளையாட வந்தபோது அனுஷ்கா உற்சாகமாக அவரது பேட்டிங்கைப் பார்க்கத் தயாரானார். மேலும் கேமரா அவர் பக்கம் திரும்பியபோது புன்னகையுடன் ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்தார். அனுஷ்காவுடன் ஒரு நண்பர் குழு வந்திருந்தது. அவர்களுடன் அனுஷ்கா உற்சாகமாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், கோலி அவுட்டானபோது அனுஷ்காவின் முகம் பெரும் சோகமாகி கோணிப் போனது. பெரும் ஷாக் அவருக்கு. கன்னத்தில் கை வைத்து உறைந்து போன அவரது முகத்தை டி.வி.யில் காட்டிக் கொண்டே இருந்தனர். ஏற்கெனவே கோலி மீது ஆத்திரத்தில் இருந்த ரசிகர்களின் வெறுப்பு அனுஷ்கா சர்மா மீதும் திரும்பியது. போட்டி முடிந்ததும் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ரசிகர்கள் இந்திய அணியின் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கோலி - அனுஷ்காவை காய்த்தனர். சில இடங்களில் விராட் கோலியின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாகக் கொண்டு சென்று தீ வைத்து எரித்தனர். அனுஷ்கா சர்மாவின் படங்களையும் எரித்தனர். காதலியுடன் ஊர் சுற்றுவதே கோலியின் மோசமான ஆட்டத்துக்கு காரணம் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டரில் கலாய்த்ததையும் காண முடிந்தது. இந்தியா அணியின் தோல்வியை விமர்சிப்பதை விட கோலி- அனுஷ்கா ஜோடியை தான் ரசிகர்கள் அதிகம் கலாய்த்தனர். #IndvsAus என்ற ஹாஷ் டாக்கில் அவர்களின் கலாய்த்தல் நேற்று டிவிட்டர் கணக்கில் பெரும் பரபரப்பாகியிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories