விருந்தில் மட்டன் இல்லை.. திருமணத்தை நிறுத்திய மணமகன்!

marriage
marriage

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே திருமண விருந்தில் மட்டன் இல்லாததால் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே திருமண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் மணமகன் வீட்டார் மணமகளின் வீட்டிற்கு ஊர்வலமாக வந்தனர்.

திருமணம் நடைபெறும் இடத்தில் மணமகனுக்கும், மணமகனின் உறவினர்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் உறவினர்கள் அனைவரும், திருமண விருந்து உண்பதற்காக சென்றுள்ளனர். ஆனால் உணவு பரிமாறும்போது, உணவில் மட்டன் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் உணவு பரிமாறியவர்களிடமும், மணப்பெண்ணின் உறவினர்களிடமும் மட்டன் இல்லாதது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் திருமண விருந்தில் மட்டன் இல்லை என்ற செய்தி மணமகனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்து மணப்பெண்ணின் பெற்றோரிடமும், உறவினர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் திருமணத்தை நிறுத்துவதாக கூறி வெளியே சென்றுள்ளார். மணமகளின் பெற்றோர் மணமகனிடம் திருமணத்தை நிறுத்த வேண்டாம், பிரச்சினை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று எவ்வளவோ கூறியுள்ளனர்.

ஆனால் மணமகனோ அது எதைக் கேட்காமல், அருகில் இருந்த அவருடைய உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மணமகனின் உறவினர்களும் அங்கு சென்றனர்.

இந்நிலையில் மாலை நேரத்தில் வெளியே சென்ற மணமகன் வேறொரு பெண்ணை திருமணம் முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பினார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே மட்டன் பரிமாறவில்லை என்பதற்காக திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories