December 6, 2025, 6:01 AM
23.8 C
Chennai

விருந்தில் மட்டன் இல்லை.. திருமணத்தை நிறுத்திய மணமகன்!

marriage
marriage

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே திருமண விருந்தில் மட்டன் இல்லாததால் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே திருமண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் மணமகன் வீட்டார் மணமகளின் வீட்டிற்கு ஊர்வலமாக வந்தனர்.

திருமணம் நடைபெறும் இடத்தில் மணமகனுக்கும், மணமகனின் உறவினர்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் உறவினர்கள் அனைவரும், திருமண விருந்து உண்பதற்காக சென்றுள்ளனர். ஆனால் உணவு பரிமாறும்போது, உணவில் மட்டன் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் உணவு பரிமாறியவர்களிடமும், மணப்பெண்ணின் உறவினர்களிடமும் மட்டன் இல்லாதது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் திருமண விருந்தில் மட்டன் இல்லை என்ற செய்தி மணமகனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்து மணப்பெண்ணின் பெற்றோரிடமும், உறவினர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் திருமணத்தை நிறுத்துவதாக கூறி வெளியே சென்றுள்ளார். மணமகளின் பெற்றோர் மணமகனிடம் திருமணத்தை நிறுத்த வேண்டாம், பிரச்சினை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று எவ்வளவோ கூறியுள்ளனர்.

ஆனால் மணமகனோ அது எதைக் கேட்காமல், அருகில் இருந்த அவருடைய உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மணமகனின் உறவினர்களும் அங்கு சென்றனர்.

இந்நிலையில் மாலை நேரத்தில் வெளியே சென்ற மணமகன் வேறொரு பெண்ணை திருமணம் முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பினார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே மட்டன் பரிமாறவில்லை என்பதற்காக திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories