
கேரளாவில் ப்ரூனோ என்ற வளர்ப்பு நாயை சிலர் கட்டி வைத்து அடித்து, கொடூரமாக கொலை செய்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரளாவை சேர்ந்த கிறிஸ்துராஜ் என்பவரின் வளர்ப்பு நாயான ப்ரூனோ தினமும் அங்குள்ள கடற்கரையில் காலையில் விளையாடுவது வழக்கம்.

அந்த வகையில் சம்பவத்தன்று கடற்கரையில் விளையாடிவிட்டு அங்கு கிடந்த படகு ஒன்றின் அருகே ப்ரூனோ ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிலர் அந்த நாய்யை படகில் கட்டி தொங்கவிட்டு, பெரிய கம்பினால் அடித்து கொலை செய்துள்ளனர்.

இந்த கொடூர வீடியோ காட்சி இணையத்தில் வைரலானநிலையில் அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Heartbreaking Video of a Pet Dog #Bruno beaten to Death in Trivandrum, #Kerala
— Arun Prasanna G (@arun_8778) June 30, 2021
Complaint lodged @ #Vizhinjam Police Station but no #FIR or #Arrest as yet#JusticeForBruno @CMOKerala @TheKeralaPolice @vijayanpinarayi @rashtrapatibhvn @KeralaGovernor pic.twitter.com/cFbRbLXcG3



