பெங்களூரு- மங்களுரு சுற்றுலா சிறப்பு ‘விஸ்டாடெம்’ பெட்டிகள் இயக்கம்!

vistadom coach - 2026

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பெங்களூரு மங்களூரு ரயில் பாதையில் பயணிகள் இயற்கையை ரசிக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ள விஸ்டாடெம் பெட்டிகளுடன் கூடிய ரயில் இயக்கப் பட்டுள்ளது.

இந்திய ரயில்வே சுற்றுலாப் பயணிகளைக் கவர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிறப்பு மலை ரயில்களை இயக்கி வருவதுடன், மலைப் பிரதேசங்களில் ரயிலில் பயணிக்கும்போது பயணிகள் இயற்கையை ரசிக்கும் வகையில் ரயிலை மெதுவாக இயக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை ரயில்வேத் துறை மேற்கொண்டு வருகிறது. மேலும், சுற்றுலாவுக்காக சிறப்பு வழித்தடங்களையும் அறிவித்து ரயில்கள் அதில் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் ‘விஸ்டாடோம்’ பெட்டிகளை தென்மேற்கு ரயில்வே வடிவமைத்துள்ளது. உலகத் தரத்திலான இந்தப் பெட்டிகளின் பக்கவாட்டிலும் மேற்கூரைப் பகுதிகளிலும் கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டு, பயணிகள் இயற்கையை வெகுவாக ரசிக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்துள்ள பதிவில், தென்மேற்கு ரயில்வே யஸ்வந்த்பூர் மங்களூரு இடையே விஸ்டாடெம் பெட்டிகளுடன் கூடிய ரயில் இயக்குகிறது. இந்த பெட்டிகளின் வசதிகளைப் பாருங்கள் என்று வீடியோவும் பகிர்ந்துள்ளார்.

இந்தப் பெட்டியின் சிறப்பம்சங்கள் குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்… ‘விஸ்டாடோம் பெட்டியில் உள்ள 44 இருக்கைகளும் இரண்டு இரண்டாக அமைக்கப் படு, அவை பயணிகளின் வசதிக்காக 180 டிகிரி கோணத்தில் சுழலும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை திருப்பி அமைத்து, பக்கவாட்டு கண்ணாடி ஜன்னலின் நேராக அமைத்துக் கொண்டு இயற்கையைக் கண்டு ரசிக்கலாம்.

vistadome - 2026

மேலும், இதில் தீ விபத்தைத் தடுப்பதற்கான வசதிகள், கண்காணிப்பு கேமரா, எல்இடி திரை, மொபைல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவை உள்ளன. முதல் கட்டமாக இரு பெட்டிகள் பெங்களூரு – மங்களூரு விரைவு ரயிலில் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த ரயில் இன்று தனது முதல் சேவையைத் தொடங்கியுள்ளது.

சுற்றுலா வழித்தடங்களில் இதேபோல் மேலும் பல ரயில்களில் இந்த வகை பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதில் பயணிக்க சிறிய அளவில் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories