December 6, 2025, 1:50 AM
26 C
Chennai

நிலச்சரிவு: உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம்: பிரதமர்!

pm modi
pm modi

மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை மிகவும் தீவிரமாக பெய்து வருகிறது. தொடர்ந்து ஒரு வாரமாக மிகவும் கனமழை பெய்து வருவதால் அந்த மாநிலத்தில் உள்ள பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் மிகவும் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக ராய்கட் மாவட்டத்தில் உள்ள தலாய் மற்றும் மலாய் மலைப்பகுதியில் கனமழை காரணமாக அந்த பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 36 பேர் உயிர் இழந்துள்ளனர் மற்றும் பலர் படு காயம் அடைந்துள்ளனர். மேலும், நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட 30 க்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

அது மட்டுமின்றி, இந்த நிலச்சரிவு காரணமாக பலர் தங்களுடைய வீடுகளை இழந்து நடுத்தெருவில் நிற்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் நிலச்சரிவு குறித்து பாரத பிரதமர் மோடி “மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிசில் சிக்கி பலர் தங்கள் உயிரை இழந்துள்ளதை கண்டு நான் மிகவும் வேதனை அடைகிறேன்.

மேலும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்.

ராய்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவராண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

பலத்த மழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தின் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.” என்று பிரதமர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories