June 14, 2025, 8:01 PM
32.4 C
Chennai

செஷல்ஸ் தீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு: விமான நிலையத்துக்கு வந்து வரவேற்றார் அதிபர்

modi-james-alix-miவிக்டோரியா: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். இதன் முதல் கட்டமாக நேற்று அவர் செஷல்ஸ் தீவுகளுக்குச் சென்றார். நேற்று மாலை தலைநகர் தில்லியில் இருந்து செஷல்ஸ் நாட்டுக்கு விமானத்தில் புறப்பட்டார் மோடி. நேற்று நள்ளிரவு செஷல்ஸ் தீவுகளைச் சென்றடைந்த பிரதமர் மோடியை, தலைநகர் விக்டோரியாவில் உள்ள விமான நிலையத்துக்கே வந்து அந்நாட்டு அதிபர் ஜேம்ஸ் அலிக்ஸ் மைக்கேல் வரவேற்றார். செஷல்ஸ் அதிபர் ஜேம்ஸ் மைக்கேலுடன் பேசும் பிரதமர் மோடி, பின்னர் அங்கே கடலோர ரேடார் கண்காணிப்பு கருவியையும் இயக்கி வைக்கிறார். அதன்பின் மார்ச் 11-12 இரு தினங்கள் மொரிஷீயஸில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள மோடி, இன்று பிற்பகல் மொரீஷியஸ் செல்கிறார். மொரீஷியஸில் தனது பயணத்தை மிகவும் சிறப்பான ஒரு தினமாக அறிவித்துள்ளார் மோடி. அங்கு சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் மோடி,  இந்த தினத்தை சிறப்பான நாளாக அறிவித்துள்ளார். 1930ம் வருடம் இதே மார்ச். 12ல்தான் தண்டி யாத்திரையை மகாத்மா காந்தி மேற்கொண்டார். அங்கு அந்நாட்டு பிரதமர் அனிரூத் ஜக்நாத்துடன் பேசும் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்றுகிறார். பின்னர், கடலோர ரோந்துக் கப்பலை இயக்கி வைத்து, இந்திய நிதி உதவியுடன் நிறைவேற்றப்படும் திட்டங்களை பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து இலங்கை புறப்பட்டு செல்கிறார். மார்ச் 13-14 இரு தினங்கள் இலங்கையில் பயணம் மேற்கொள்கிறார் மோடி. அங்கு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இச்சந்திப்பின்போது, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் பிரதமர் மோடி செல்கிறார். அங்கு இந்தியா சார்பில் கட்டப்பட்ட 27 ஆயிரம் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார். யாழ்ப்பாண கலாசார மையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். தலைமன்னாரில், புதிய ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, அனுராதபுரத்தில் உள்ள மகாபோதி மரத்தை பார்வையிடுகிறார். இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பிரதமர் மோடியுடன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவும் சென்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

திருக்கூடல் மலையும் தென்பழனியும்

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவனும் இவரும் ஒரே நேர் கோட்டில் இணையும் படி அமைக்கப்பட்டுள்ளது

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

சம்பளம் வழங்கக் கோரி மதுரை பல்கலை., பணியாளர்கள் போராட்டம்!

ஆண்டுகளாகவே காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள், அலுவலர்கள் சம்பளம் ஓய்வூதியம் வழங்கப்படாத கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு

போயிங் போய்விட்டது! 11A மட்டும் தப்பியது!

விமானம் மேலேற முடியாமல் திணறி தரை இறங்கியுள்ளது.அதாவது பறக்க போதிய உந்துவிசை கிடைக்காமல் தரையில் விழுந்துள்ளது.

Topics

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

திருக்கூடல் மலையும் தென்பழனியும்

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவனும் இவரும் ஒரே நேர் கோட்டில் இணையும் படி அமைக்கப்பட்டுள்ளது

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

சம்பளம் வழங்கக் கோரி மதுரை பல்கலை., பணியாளர்கள் போராட்டம்!

ஆண்டுகளாகவே காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள், அலுவலர்கள் சம்பளம் ஓய்வூதியம் வழங்கப்படாத கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு

போயிங் போய்விட்டது! 11A மட்டும் தப்பியது!

விமானம் மேலேற முடியாமல் திணறி தரை இறங்கியுள்ளது.அதாவது பறக்க போதிய உந்துவிசை கிடைக்காமல் தரையில் விழுந்துள்ளது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

அகமதபாதில் விமானம் விழுந்து பயங்கர விபத்து!

அமித் ஷா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரை அகமதாபாத் செல்ல உத்தரவிட்டார்.

பெண்களை ‘ஓஸி’ என கேலி பேசும் திமுக.,வினர் இனி வெட்டியாக வீட்டில் அமர்வார்கள்!

வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

Entertainment News

Popular Categories