செஷல்ஸ் தீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு: விமான நிலையத்துக்கு வந்து வரவேற்றார் அதிபர்

Published:

modi-james-alix-miவிக்டோரியா: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். இதன் முதல் கட்டமாக நேற்று அவர் செஷல்ஸ் தீவுகளுக்குச் சென்றார். நேற்று மாலை தலைநகர் தில்லியில் இருந்து செஷல்ஸ் நாட்டுக்கு விமானத்தில் புறப்பட்டார் மோடி. நேற்று நள்ளிரவு செஷல்ஸ் தீவுகளைச் சென்றடைந்த பிரதமர் மோடியை, தலைநகர் விக்டோரியாவில் உள்ள விமான நிலையத்துக்கே வந்து அந்நாட்டு அதிபர் ஜேம்ஸ் அலிக்ஸ் மைக்கேல் வரவேற்றார். செஷல்ஸ் அதிபர் ஜேம்ஸ் மைக்கேலுடன் பேசும் பிரதமர் மோடி, பின்னர் அங்கே கடலோர ரேடார் கண்காணிப்பு கருவியையும் இயக்கி வைக்கிறார். அதன்பின் மார்ச் 11-12 இரு தினங்கள் மொரிஷீயஸில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள மோடி, இன்று பிற்பகல் மொரீஷியஸ் செல்கிறார். மொரீஷியஸில் தனது பயணத்தை மிகவும் சிறப்பான ஒரு தினமாக அறிவித்துள்ளார் மோடி. அங்கு சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் மோடி,  இந்த தினத்தை சிறப்பான நாளாக அறிவித்துள்ளார். 1930ம் வருடம் இதே மார்ச். 12ல்தான் தண்டி யாத்திரையை மகாத்மா காந்தி மேற்கொண்டார். அங்கு அந்நாட்டு பிரதமர் அனிரூத் ஜக்நாத்துடன் பேசும் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்றுகிறார். பின்னர், கடலோர ரோந்துக் கப்பலை இயக்கி வைத்து, இந்திய நிதி உதவியுடன் நிறைவேற்றப்படும் திட்டங்களை பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து இலங்கை புறப்பட்டு செல்கிறார். மார்ச் 13-14 இரு தினங்கள் இலங்கையில் பயணம் மேற்கொள்கிறார் மோடி. அங்கு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இச்சந்திப்பின்போது, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் பிரதமர் மோடி செல்கிறார். அங்கு இந்தியா சார்பில் கட்டப்பட்ட 27 ஆயிரம் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார். யாழ்ப்பாண கலாசார மையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். தலைமன்னாரில், புதிய ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, அனுராதபுரத்தில் உள்ள மகாபோதி மரத்தை பார்வையிடுகிறார். இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பிரதமர் மோடியுடன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவும் சென்றுள்ளது.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img