செஷல்ஸ் தீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு: விமான நிலையத்துக்கு வந்து வரவேற்றார் அதிபர்

modi-james-alix-miவிக்டோரியா: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். இதன் முதல் கட்டமாக நேற்று அவர் செஷல்ஸ் தீவுகளுக்குச் சென்றார். நேற்று மாலை தலைநகர் தில்லியில் இருந்து செஷல்ஸ் நாட்டுக்கு விமானத்தில் புறப்பட்டார் மோடி. நேற்று நள்ளிரவு செஷல்ஸ் தீவுகளைச் சென்றடைந்த பிரதமர் மோடியை, தலைநகர் விக்டோரியாவில் உள்ள விமான நிலையத்துக்கே வந்து அந்நாட்டு அதிபர் ஜேம்ஸ் அலிக்ஸ் மைக்கேல் வரவேற்றார். செஷல்ஸ் அதிபர் ஜேம்ஸ் மைக்கேலுடன் பேசும் பிரதமர் மோடி, பின்னர் அங்கே கடலோர ரேடார் கண்காணிப்பு கருவியையும் இயக்கி வைக்கிறார். அதன்பின் மார்ச் 11-12 இரு தினங்கள் மொரிஷீயஸில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள மோடி, இன்று பிற்பகல் மொரீஷியஸ் செல்கிறார். மொரீஷியஸில் தனது பயணத்தை மிகவும் சிறப்பான ஒரு தினமாக அறிவித்துள்ளார் மோடி. அங்கு சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் மோடி,  இந்த தினத்தை சிறப்பான நாளாக அறிவித்துள்ளார். 1930ம் வருடம் இதே மார்ச். 12ல்தான் தண்டி யாத்திரையை மகாத்மா காந்தி மேற்கொண்டார். அங்கு அந்நாட்டு பிரதமர் அனிரூத் ஜக்நாத்துடன் பேசும் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்றுகிறார். பின்னர், கடலோர ரோந்துக் கப்பலை இயக்கி வைத்து, இந்திய நிதி உதவியுடன் நிறைவேற்றப்படும் திட்டங்களை பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து இலங்கை புறப்பட்டு செல்கிறார். மார்ச் 13-14 இரு தினங்கள் இலங்கையில் பயணம் மேற்கொள்கிறார் மோடி. அங்கு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இச்சந்திப்பின்போது, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் பிரதமர் மோடி செல்கிறார். அங்கு இந்தியா சார்பில் கட்டப்பட்ட 27 ஆயிரம் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார். யாழ்ப்பாண கலாசார மையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். தலைமன்னாரில், புதிய ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, அனுராதபுரத்தில் உள்ள மகாபோதி மரத்தை பார்வையிடுகிறார். இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பிரதமர் மோடியுடன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவும் சென்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories