குடும்பத்தையே துப்பாக்கியால் போட்டுத் தள்ளிய கல்லூரி மாணவன்!

murder boy
murder boy

தாய், தந்தை, 17 வயது தங்கை மற்றும் பாட்டி என ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களையும் தான் தான் கொலை செய்ததாக 20 வயது மகன் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஹரியானா மாநிலம் ரோத்தக் நகரில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தவர் பிரதீப் மாலிக், இவருக்கு வயது 45. கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதியன்று பிரதீப் மாலிக், விஜய் நகரில் உள்ள அவரது வீட்டில் அவரும், அவருடைய மனைவி சந்தோஷ் பப்லி (வயது 40), 17 வயதாகும் அவருடைய மகள் நேகா மற்றும் பப்லியின் தாயார் ரோஷ்னி தேவி ஆகியோர் துப்பாக்கியால் சுடப்பட்டு துடிதுடிக்க கொலை செய்யப்பட்டனர்.

17 வயதாகும் நேகா குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. குண்டு சத்தம் பக்கத்து வீட்டுக்காரருக்கு கூட கேட்கவில்லை என்பதை அறிந்த காவல்துறையினர் திகைத்துப் போயினர்.

இந்த கொலைகளை செய்தது யார் என்பதை கண்டறிய இரண்டு டி.எஸ்.பிக்கள் கொண்ட சிறப்பு காவல் குழுக்கள் அமைக்கப்பட்டது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

கொலை செய்யப்பட்ட பிரதீப் மாலிக்கின் 20 வயது மகன் அபிஷேக் மாலிக் , தனது சாட்சியத்தை பல முறை மாற்றிக் கூறிவந்ததால் அவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அருகாமையில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆராய்ந்த காவல்துறையினர் அபிஷேக்கின் நடத்தை, குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், நிதி விவகாரங்கள் போன்றவற்றை பிரதீப் மாலிக்கின் சகோதரர் மூலமாக அறிந்து கொண்டனர்.

இதையடுத்து அபிஷேக்கிடம் துருவித்துருவி விசாரித்த போது, தான் தனது தந்தை, தாய், சகோதரி மற்றும் பாட்டியை கொலை செய்ததாக கூறி அதிரவைத்தார்.

குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக அபிஷேக் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார். தனது தந்தையின் தொழில் சம்பந்தமாக அவருடனும், குடும்பத்தினருடனும் அபிஷேக்கிற்கு பிரச்னை இருந்துள்ளது.

இதன் காரணமாகவே துப்பாக்கியால் அனைவரையும் அவர் சுட்டுக் கொலை செய்துள்ளார். இது குறித்து காவல் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த கொலைகளின் பின்னணியில் அபிஷேக் மட்டும் தான் இருப்பதாக கூற முடியாது என கூறினார்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

விசாரணை தொடர்ந்து கொண்டிருப்பதால் இந்த கொலைகளின் பின்னணி இன்னும் முழுவதுமாக வெளியாகவில்லை.

இந்நிலையில் 20 வயது மகனே தந்தை, தாய், 17 வயது தங்கை, பாட்டி என 4 பேரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அபிஷேக் கல்லூரி மாணவர் என தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories