விமானத்தில் மயக்கம் அடைந்த பயணியை காப்பாற்றிய மத்திய அமைச்சர்! குவியும் பாராட்டு!

bhakvath karath
bhakvath karath

தில்லியில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத், திடீரென்று மயக்கம் அடைந்த பயணி ஒருவருக்கு முதலுதவி அளித்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

தில்லியில் இருந்து மும்பைக்கு நவம்பர் 16 அதிகாலை இண்டிகோ விமானம் ஒன்று சென்றது. அந்த விமானத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத்தும் சென்றிருந்தார்.

இதனிடையே அதிகாலை சுமார் 2 மணியளவில் விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது விமானப் பணிப்பெண் ஒருவர் அவசரமாக மருத்துவ சிகிச்சைக்கு டாக்டர் உதவி வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து விமானப் பணிப்பெண்ணிடம் பிரச்சனை குறித்து கேட்டு தெரிந்து கொண்ட மத்திய இணையமைச்சர் பகவத் காரத், முதலுதவி தேவைப்பட்ட நபருக்கு சிகிச்சை அளித்தார். அவர் மயக்கம் நிலையில் இருந்த பயணியின் சட்டையை கழற்றி அவரது இதயத்திற்கு ரத்தம் செல்லும் வகையில் கால்களை உயர்த்தி தலையணையை வைத்தார்.

உடனடியாக சுயநினைவு அடைந்த பயணிக்கு குளுக்கோஸ் அளிக்கப்பட்ட நிலையில் பயணி கண் விழித்தார். இது அங்கிருந்தவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

modi
modi

தக்க சமயத்தில் பயணியின் உயிரை காப்பாற்றிய மத்திய இணையமைச்சருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இது தொடர்பாக இண்டிகோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. அதற்கு பிரதமர் மோடி ‘அவர் இதயத்தில் எப்போதும் மருத்துவர்’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்திய இணையமைச்சர் பகவத் காரத் குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories