விமானத்தில் மயக்கம் அடைந்த பயணியை காப்பாற்றிய மத்திய அமைச்சர்! குவியும் பாராட்டு!

bhakvath karath
bhakvath karath

தில்லியில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத், திடீரென்று மயக்கம் அடைந்த பயணி ஒருவருக்கு முதலுதவி அளித்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

தில்லியில் இருந்து மும்பைக்கு நவம்பர் 16 அதிகாலை இண்டிகோ விமானம் ஒன்று சென்றது. அந்த விமானத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத்தும் சென்றிருந்தார்.

இதனிடையே அதிகாலை சுமார் 2 மணியளவில் விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது விமானப் பணிப்பெண் ஒருவர் அவசரமாக மருத்துவ சிகிச்சைக்கு டாக்டர் உதவி வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து விமானப் பணிப்பெண்ணிடம் பிரச்சனை குறித்து கேட்டு தெரிந்து கொண்ட மத்திய இணையமைச்சர் பகவத் காரத், முதலுதவி தேவைப்பட்ட நபருக்கு சிகிச்சை அளித்தார். அவர் மயக்கம் நிலையில் இருந்த பயணியின் சட்டையை கழற்றி அவரது இதயத்திற்கு ரத்தம் செல்லும் வகையில் கால்களை உயர்த்தி தலையணையை வைத்தார்.

உடனடியாக சுயநினைவு அடைந்த பயணிக்கு குளுக்கோஸ் அளிக்கப்பட்ட நிலையில் பயணி கண் விழித்தார். இது அங்கிருந்தவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

modi
modi

தக்க சமயத்தில் பயணியின் உயிரை காப்பாற்றிய மத்திய இணையமைச்சருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இது தொடர்பாக இண்டிகோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. அதற்கு பிரதமர் மோடி ‘அவர் இதயத்தில் எப்போதும் மருத்துவர்’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்திய இணையமைச்சர் பகவத் காரத் குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories