பெங்களூரு: கர்நாடகத்தில் மேகதாது அணையைக் கட்டுவதில், மாநில அரசு மும்முரமாக உள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளது டெல்டா விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கர்நாடக அரசின் 2015-16ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வரும் நிதித்துறையை தன்வசம் வைத்துள்ளவருமான சித்தராமையா நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பு அணைகள் கட்டி, கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றுவதற்கு விரிவான திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இந்த திட்டத்துக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேகதாது அணை- கர்நாடகம் மும்முரம்: சித்தராமையாவின் அறிவிப்பால் டெல்டா விவசாயிகள் அதிர்ச்சி
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

