December 8, 2025, 3:52 PM
28.2 C
Chennai

டெல்லி- மும்பை விரைவுச் சாலையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

1141528 untitled 3 - 2025

சுற்றுலாத் துறைக்கு பெயர் பெற்ற ராஜஸ்தானுக்கு. மேலும் புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதால் ஈர்ப்பு மேலும் அதிகரிக்கும்.என்று டெல்லி- மும்பை விரைவுச் சாலையின் 246 கி.மீ பகுதியை பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் தௌசாவில் இன்று திறந்து வைத்த போது பேசினார்.

டெல்லி- மும்பை விரைவுச் சாலையின் 246 கி.மீ பகுதியை பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் தௌசாவில் இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.இத்

திட்டம் டெல்லி- தௌசா- லால்சோட் பாதை தேசிய தலைநகருக்கும் ஜெய்ப்பூருக்கும் இடையிலான பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது.

images 96 1 - 2025

டெல்லி- மும்பை எக்ஸ்பிரஸ்வே 1,386 கிமீ நீளத்துடன் இந்தியாவின் மிக நீளமான பாதையா அமைகிறது. டெல்லிக்கும் மும்பைக்கும் இடையிலான பயண தூரம் 12 சதவீதம் குறையும் என்றும், 1,424 கிமீ முதல் 1,242 கிமீ என்றும், பயண நேரம் 50 சதவீதம் குறையும் என்றும், தற்போதைய 24 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான டெல்லி- மும்பை விரைவுச்சாலையின் முதல் கட்டம் உட்பட மொத்தம் நான்கு திட்டங்களுக்கு காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

விழாவில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய இணை அமைச்சர் வி.கே சிங், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் பிற தலைவர்கள் மேடையில் இருந்தனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் வீடியோ இணைப்பு மூலம் நிகழ்ச்சியில் உரையாற்றினர்.

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:- நெடுஞ்சாலைத் திட்டங்கள், துறைமுகங்கள், ரயில்வே, ஆப்டிகல் ஃபைபர் போன்றவற்றில் அரசு முதலீடு செய்து, மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கும்போது, வணிகர்கள், சிறு கடைக்காரர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அது பலம் அளிக்கிறது.

உள்கட்டமைப்பு மீதான முதலீடு அதிக முதலீட்டை ஈர்க்கிறது. இத்திட்டம், 12,150 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டது. இந்த புதிய பிரிவானது ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி இடையிலான பயண நேரத்தை பாதியாக குறைக்கும். பணி நிமித்தமாக டெல்லிக்கு செல்பவர்கள், தங்கள் பணியை முடித்து மாலையில் விரைவில் வீடு திரும்பலாம். விரைவுச் சாலையைச் சுற்றி கிராமப்புற சந்தைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அங்கு உள்ளூர் கைவினைஞர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யலாம்.

இந்த விரைவுச் சாலையானது சரிஸ்கா தேசியப் பூங்கா, கியோலாடியோ தேசியப் பூங்கா, ரந்தம்பூர் தேசியப் பூங்கா மற்றும் ஜெய்ப்பூர், அஜ்மீர் போன்ற நகரங்களுக்கும் பயனளிக்கும். ராஜஸ்தான் ஏற்கனவே அதன்

சுற்றுலாத் துறைக்கு பெயர் பெற்றது. மேலும் புதிய உள்கட்டமைப்பு திட்டத்துடன் ஈர்ப்பு மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Topics

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Entertainment News

Popular Categories